என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மெஞ்ஞானபுரம் அருகே இளம்பெண் மாயம்
Byமாலை மலர்29 Oct 2020 11:12 AM GMT (Updated: 29 Oct 2020 11:12 AM GMT)
மெஞ்ஞானபுரம் அருகே இளம்பெண் மாயமானது குறித்து அவரது தாயார் போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.
மெஞ்ஞானபுரம்:
மெஞ்ஞானபுரம் அருகே உள்ள உதிரமாடன்குடியிருப்பு அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி அன்னலட்சுமி (வயது23) . ராமச்சந்திரன் கோவையில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஹர்ஷிகா (4) என்ற பெண் குழந்தை உள்ளது.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கணவனை விட்டு பிரிந்து அன்னலட்சுமி உதிரமாடன் குடியிருப்பில் உள்ள தனது தாயாரான சரஸ்வதி வீட்டில் வசித்து வருகிறார்.
இந்தநிலையில் அன்னலட்சுமியிடம் சமாதானம் பேசி கணவருடன் சேர்ந்து வாழ ஏற்பாடு செய்தனர். கணவருடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லாமல் அன்னலட்சுமி வீட்டைவிட்டு நேற்று காலையில் மாயமானார். பல இடங்களில் தேடியும் அவரை காணவில்லை.
இதுகுறித்து அவரது தாயார் சரஸ்வதி மெஞ்ஞானபுரம் போலீசில் புகார் செய்துள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்னலட்சுமியை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X