என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெண்களின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் - வானதி சீனிவாசன்
Byமாலை மலர்29 Oct 2020 9:48 AM GMT (Updated: 29 Oct 2020 9:48 AM GMT)
பெண்களின் வளர்ச்சிக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பாடுபடுவேன் என பா.ஜ.க. மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை:
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து கோவை பா.ஜ.க. அலுவலகத்தில் அவரை பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், உழைக்கும் ஒவ்வொரு எளிய தொண்டனுக்கும் உரிய கௌரவத்தையும், மரியாதையையும் பா.ஜ.க. வழங்கி வருகிறது என்பதற்கு எனது நியமனம் ஒரு எடுத்துக்காட்டு என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “பெண்களுடைய முன்னேற்றத்திற்கான செயல்திட்டங்களை நம்மால் செயல்படுத்த முடியும். பெண்களின் வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றிற்காக நான் பாடுபடுவேன். எனக்கு வாய்ப்பளித்த தலைவர்கள் அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X