search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    தஞ்சை அருகே ரெயில் மோதி தொழிலாளி பலி

    தஞ்சை அருகே ரெயில் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சையை அடுத்த மேலவழுத்தூரில் ரெயில்வே தண்டவாளத்தில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடப்பதாக தஞ்சை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேலன், ஏட்டுக்கள் அருணாச்சலம், ஜெயந்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    பின்னர் அங்கு கிடந்த ஆண் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை செய்ததில் மைசூரில் இருந்து மயிலாடுதுறை நோக்கி நேற்றுஅதிகாலை சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி இறந்ததும், அவர், அய்யம்பேட்டை பகுதியில் கூலி வேலை செய்து வந்த பாஸ்கர்(வயது35) என்பதும் தெரியவந்தது. மேலும் அவர், ஒரத்தநாடு அருகே உள்ள ஆயக்குடி கிராமத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவர் தண்டவாளத்தை கடந்து செல்லும்போது ரெயில் மோதி இறந்தாரா? அல்லது தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    Next Story
    ×