search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    தமிழகத்தில் இன்று 79,350 பேருக்கு பரிசோதனை: 2,869 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

    தமிழகத்தில் இன்று புதிதாக 2,869 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 31 பேர் உயிரிழந்தனர்.
    தமிழகத்தில் இன்று புதிதாக 2,869 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, சுமார் நான்கு மாதத்திற்குப் பிறகு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து 2-வது நாளாக 3 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.

    இதுவரை மொத்தம் 7,09,005 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று 4,019 பேர் டிஸ்சார்ஜ் ஆக 6,67,475 பேர் ஒட்டுமொத்தமாக குணமடைந்துள்ளனர். 30,606 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இன்று அரசு மருத்துவமனையில் 17 பேர், தனியார் மருத்துவமனையில் 14 பேர் என மொத்தம் 31 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை 10,934 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இன்று 80690 மாதிரிகளும், 79350 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 9517507 மாதிரிகளும், 9257449 பேருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    Next Story
    ×