search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வாலிபரிடம் பணம் கேட்டு மிரட்டிய ரவுடி கைது

    வாலிபரிடம் பணம் கேட்டு மிரட்டிய ரவுடியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேலம்:

    சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் பூபதி (வயது 21). சம்பவத்தன்று அந்தப் பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்றார். அப்போது அடையாளம் தெரியாத ஒருவர் வழிமறித்து அவரிடம் கத்தியை காண்பித்து ரூ.5 ஆயிரம் கேட்டு மிரட்டி உள்ளார். அவரிடம் தப்பிச்சென்ற அவர் அம்மாபேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் சந்தேகத்தின் பேரில் அதே பகுதியை சேர்ந்த கனகராஜ் (29) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் வாலிபரிடம் பணம் கேட்டு மிரட்டியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கனகராஜ் மீது வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதுடன், அவர் பிரபல ரவுடி என்று போலீசார் தெரிவித்தனர்.
    Next Story
    ×