search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தமிழகத்தில் 3 நாட்களுக்கு 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    28ந்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ள நிலையில் 13 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    திருத்தணி, நாற்றாம்பள்ளியில் தலா 5 செ.மீ., ஸ்ரீபெரும்புதூர், பெனுகொண்டாபுரத்தில் 4 செ.மீ., மழை பதிவானது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×