search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    எலிமருந்தை தின்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

    கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் எலிமருந்தை தின்ற பெண் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
    கள்ளப்பெரம்பூர்:

    தஞ்சையை அடுத்த திருக்கானூர்பட்டி அய்யனார்கோவில் தெருவை சேர்ந்தவர் அடைகலராஜ். இவரது மகள் ஜூலி (வயது28). இவருக்கும், புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள கோட்டைக்குடியை சேர்ந்த அந்தோணிசாமி என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. 

    ஜூலி தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திருக்கானூர்ப்பட்டியில் உள்ள அவரது தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் கடந்த 16-ந் தேதி ஜூலி எலி மருந்தை தின்று மயங்கி கிடந்தார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜூலி பரிதாபமாக இறந்தார். 

    இதுகுறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×