என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பல்லடத்தில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
Byமாலை மலர்22 Oct 2020 12:48 PM GMT (Updated: 22 Oct 2020 12:48 PM GMT)
தொண்டையில் ஏற்பட்ட கட்டி குணமாகாததால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பல்லடம்:
பல்லடம் கொசவம்பாளையம் ரோடு காலனி பகுதியை சேர்ந்தவர் ராமன் (வயது 75). இவரது மனைவி ஏற்கனவே இறந்து விட்டார், இதனால் இவரது மகன் முருகன் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். பல்லடம் உழவர் சந்தையில் பகுதிநேர துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவருக்கு தொண்டையில் நோய் ஏற்பட்டு கட்டி உருவானது. நாளுக்கு நாள் வீக்கம் அதிகமாகவே பல இடங்களில் சிகிச்சை பெற்றும், நோய் குணமாகவில்லை. இதனால் வருத்தத்தில் இருந்த ராமன், நேற்று காலை அவரது அறையில், ஓய்வெடுக்க சென்றார். மதிய உணவிற்கு அப்பா வரவில்லை என முருகன் சென்று பார்த்தபோது, சாணிப்பவுடர் (விஷம்) குடித்த நிலையில் மயங்கிக் கிடந்தார்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து முருகன் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X