search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ராமநாதபுரம் பகுதியில் தலைக்கவசம் அணியாத 499 பேர் மீது வழக்கு

    ராமநாதபுரம் பகுதியில் தலைக்கவசம் அணியாத 499 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் பகுதியில் நேற்று முன்தினம் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் போக்குவரத்து மற்றும் சாலை விதிகளை மீறியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலிக்கப்பட்டது. 

    இவ்வாறு அதிக வேகத்தில் சென்றதாக 6 பேர் மீதும், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டிச்சென்ற 16 பேர் மீதும், குடிபோதையில் வாகனம் ஓட்டிச்சென்றதாக ஒருவர் மீதும், தலைக்கவசம் அணியாமல் சென்ற 425 பேர் மீதும், தலைக்கவசம் அணியாமல் பின்னால் அமர்ந்து சென்ற 74 பேர் மீதும், சீட்பெல்ட் அணியாமல் சென்ற 26 பேர் மீதும், கண்கூசும் விளக்கு ஒளிரவிட்டு சென்றதாக 3 பேர் மீதும், ஓட்டுனர் உரிமம் இல்லாத 16 பேர் மீதும், 3 பேர் பயணம் செய்ததாக 7 பேர் மீதும், இதர பிரிவுகளின் கீழ் 184 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களிடம் இருந்து அபராதமாக ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 100 வசூலிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×