search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி
    X
    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

    முதல்-அமைச்சர் 22-ந் தேதி திருப்பூர் வருகை: முன்னேற்பாடுகள் தீவிரம்

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 22-ந்தேதி திருப்பூர் வர உள்ளார். கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
    திருப்பூர்:

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 22-ந்தேதி திருப்பூர் வர உள்ளார். திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் 22-ந் தேதி மதியம் 2 மணிக்கு நடக்கும் ஆய்வுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் பங்கேற்கிறார். 

    கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மக்களுக்கான திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்கிறார். விவசாய சங்க பிரதிநிதிகளுடன் சந்திப்பு, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நிதி உதவி மற்றும் நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் வழங்க உள்ளார்.

    திருப்பூர் மாவட்டத்தில் நிறைவு பெற்றுள்ள வளர்ச்சி திட்டப்பணிகளையும் முதல்-அமைச்சர் தொடங்கி வைக்க இருப்பதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். முதல்-அமைச்சர் திருப்பூர் வருகையையொட்டி திருப்பூர் கலெக்டர் அலுவலக அதிகாரிகள் முன்னேற்பாடு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள்.
    Next Story
    ×