என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குமரியில் கொட்டித்தீர்த்த மழை- பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 70 அடியை நெருங்குகிறது
Byமாலை மலர்14 Oct 2020 6:56 AM GMT
குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை கொட்டித்தீர்த்து வருகிறது. சுருளக்கோடு பகுதியில் 48.6 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 70 அடியை நெருங்குகிறது.
நாகர்கோவில்:
வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலையைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக குமரி மாவட்டப் பகுதிகளிலும் மழை கொட்டித்தீர்த்து வருகிறது. நாகர்கோவில் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் நேற்று முன்தினம் பிற்பகலில் தொடங்கிய மழை இரவு வரை விட்டு, விட்டு பெய்தது.
நேற்று அதிகாலையில் இருந்து காலை 10.30 மணி வரை விட்டு, விட்டு மழை பெய்தது. இதனால் நாகர்கோவில் நகரின் முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதில் வாகனங்கள் மிதந்தபடி சென்றன. இதேநிலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தது. அதன்பிறகு வெயிலும், மழையுமாக மாறி, மாறி இருந்தது.
நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-
பேச்சிப்பாறை - 19.6, பெருஞ்சாணி- 25.8, சிற்றார் 1- 18, சிற்றார் 2-38, புத்தன் அணை- 24.6, மாம்பழத்துறையாறு- 25.2, முக்கடல்- 19, பூதப்பாண்டி- 25.2, களியல்- 9.6, கன்னிமார்- 39.2, கொட்டாரம்- 34, குழித்துறை- 31, மயிலாடி- 28.2, நாகர்கோவில்- 24.2, சுருளக்கோடு- 48.6, தக்கலை- 37, குளச்சல்- 11, இரணியல்- 8.4, பாலமோர்- 29.6, ஆரல்வாய்மொழி- 14, கோழிப்போர்விளை- 28, அடையாமடை- 14, குருந்தங்கோடு- 16.6, முள்ளங்கினாவிளை- 31, ஆனைக்கிடங்கு- 22.4 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.
இதில் அதிகபட்சமாக சுருளக்கோடு பகுதியில் 48.6 மி.மீ. அளவு மழை பெய்துள்ளது.
மழை காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 657 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 108 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பெருஞ்சாணி அணைக்கு 938 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 800 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சிற்றார்-1 அணைக்கு 167 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. முக்கடல் அணைக்கு 2 கன அடி தண்ணீர் வருகிறது. 7.42 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
நேற்றைய நிலவரப்படி பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 39.15 அடியாகவும், பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 69.20 அடியாகவும், சிற்றார்-1 அணை நீர்மட்டம் 13.32 அடியாகவும், சிற்றார்-2 அணையின் நீர்மட்டம் 13.41 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 8.90 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை முழுமையாக நிறைந்து, முழு கொள்ளளவான 54.12 அடியாகவும் உள்ளது. முக்கடல் அணையின் நீர்மட்டம் 20.7 அடியாக உள்ளது.
வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலையைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக குமரி மாவட்டப் பகுதிகளிலும் மழை கொட்டித்தீர்த்து வருகிறது. நாகர்கோவில் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் நேற்று முன்தினம் பிற்பகலில் தொடங்கிய மழை இரவு வரை விட்டு, விட்டு பெய்தது.
நேற்று அதிகாலையில் இருந்து காலை 10.30 மணி வரை விட்டு, விட்டு மழை பெய்தது. இதனால் நாகர்கோவில் நகரின் முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதில் வாகனங்கள் மிதந்தபடி சென்றன. இதேநிலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தது. அதன்பிறகு வெயிலும், மழையுமாக மாறி, மாறி இருந்தது.
நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-
பேச்சிப்பாறை - 19.6, பெருஞ்சாணி- 25.8, சிற்றார் 1- 18, சிற்றார் 2-38, புத்தன் அணை- 24.6, மாம்பழத்துறையாறு- 25.2, முக்கடல்- 19, பூதப்பாண்டி- 25.2, களியல்- 9.6, கன்னிமார்- 39.2, கொட்டாரம்- 34, குழித்துறை- 31, மயிலாடி- 28.2, நாகர்கோவில்- 24.2, சுருளக்கோடு- 48.6, தக்கலை- 37, குளச்சல்- 11, இரணியல்- 8.4, பாலமோர்- 29.6, ஆரல்வாய்மொழி- 14, கோழிப்போர்விளை- 28, அடையாமடை- 14, குருந்தங்கோடு- 16.6, முள்ளங்கினாவிளை- 31, ஆனைக்கிடங்கு- 22.4 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.
இதில் அதிகபட்சமாக சுருளக்கோடு பகுதியில் 48.6 மி.மீ. அளவு மழை பெய்துள்ளது.
மழை காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 657 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 108 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பெருஞ்சாணி அணைக்கு 938 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 800 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. சிற்றார்-1 அணைக்கு 167 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. முக்கடல் அணைக்கு 2 கன அடி தண்ணீர் வருகிறது. 7.42 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
நேற்றைய நிலவரப்படி பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 39.15 அடியாகவும், பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 69.20 அடியாகவும், சிற்றார்-1 அணை நீர்மட்டம் 13.32 அடியாகவும், சிற்றார்-2 அணையின் நீர்மட்டம் 13.41 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 8.90 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை முழுமையாக நிறைந்து, முழு கொள்ளளவான 54.12 அடியாகவும் உள்ளது. முக்கடல் அணையின் நீர்மட்டம் 20.7 அடியாக உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X