search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஷ்பு
    X
    குஷ்பு

    தடையை மீறி போராட்டம்- குஷ்பு மீது போலீசார் வழக்கு

    தடையை மீறி சத்தியாகிரக அறவழி போராட்டம் நடத்தியதாக குஷ்பு உள்ளிட்ட 150 பேர் மீது 3 பிரிவின் கீழ் செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    பெரம்பூர்:

    உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராசில் தலித் இளம் பெண்ணை சிலர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தை கண்டித்து பெரம்பூர் ரெயில் நிலையம் எதிரே காங்கிரஸ் கட்சியினர் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சியின் வடசென்னை மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையில் நடைபெற்ற சத்தியாகிரக அறவழி அமர்வு அறவழிப்போராட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செய்தித்தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.

    இந்த நிலையில், தடையை மீறி சத்தியாகிரக அறவழி போராட்டம் நடத்தியதாக குஷ்பு உள்ளிட்ட 150 பேர் மீது 3 பிரிவின் கீழ் செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    Next Story
    ×