search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தல்- 3 பேர் கைது

    திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பள்ளிப்பட்டு:

    திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் தமிழக எல்லைப்பகுதியில் அமைந்துள்ள வெங்கடாபுரம் கிராம சுற்றுப்பகுதிகளில் கஞ்சா கடத்துவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து, தனிப்படை போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது ஆந்திர பகுதியிலிருந்து மிக வேகமாக ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த திருத்தணியை சேர்ந்த உதயகுமார் (19), ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த நந்தகுமார் (19), மேகநாதன் (20) ஆகியோரை தடுத்து நிறுத்தி சோதித்தனர். அதில் 120 கிராம் எடையுள்ள கஞ்சா பாக்கெட்டுகளாக பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, 3 வாலிபர்களை கைது செய்த போலீசார், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×