search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உயிரிழப்பு
    X
    உயிரிழப்பு

    சேலம் அருகே பாறைகள் வெடிவைத்து தகர்ப்பு- தொழிலாளி பலி

    சேலம் அருகே பாறைகள் வெடிவைத்து தகர்க்கப்பட்டபோது படுகாயம் அடைந்த தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    சேலம்:

    சங்ககிரி தேவண்ணக்கவுண்டனூர் ஊராட்சி, மஞ்சுப்பள்ளம், சானியாங்காட்டில், விவசாயி தங்கராஜ், (வயது 50), என்பவருக்கு சொந்தமான பாறை நிலம் உள்ளது. அங்கு, இரு மாதமாக, சரிப்பாறைக்காட்டைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், (46) ஒப்பந்த முறையில் கூலித்தொழிலாளர் மூலம், கற்களை உடைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

    நேற்று மதியம் 2.45 மணிக்கு, வெடி வைத்து பாறைகளை உடைக்கும் பணி நடந்தது. அப்போது, அங்கு பணிபுரிந்த கூலித்தொழிலாளியான, கொங்கணாபுரம், ராயனம்பட்டியைச் சேர்ந்த பழனிசாமி (55) மீது சிதறிய கற்கள் பட்டன.

    அதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். சங்ககிரி போலீசார், பழனிசாமி உடலை மீட்டு விசாரித்ததில், பாலகிருஷ்ணன், அனுமதியின்றி பாறையை வெடிவைத்து தகர்த்தது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×