என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரேஷன் கடைகளில் பாமாயில் வழங்க ரூ.47 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு- தமிழக அரசு உத்தரவு
Byமாலை மலர்1 Oct 2020 7:20 AM GMT (Updated: 1 Oct 2020 11:04 AM GMT)
ரேஷன் கடைகளில் இந்த மாதம் முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை பாமாயில் வழங்க ரூ.47 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை:
பொது வினியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் மாதம் ஒன்றுக்கு குடும்ப அட்டை தாரர்களுக்கு பாமாயில் வழங்க 15 ஆயிரத்து 600 கிலோ லிட்டர் தேவைப்படுகிறது.
ரேஷன் கடைகளில் மாத இறுதி நாட்களில் பாமாயில் கிடைப்பதில்லை என பொதுமக்களிடமிருந்து அதிக புகார்கள் வந்ததை அடுத்து ஒரு லிட்டர் பாமாயில் 25 ரூபாய்க்கு வழங்க பாமாயில் பாக்கெட்டுகள் கொள்முதல் செய்ய 47 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் மாதம் முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை தங்குதடையின்றி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பாமாயில் வழங்கப்பட உள்ளது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில் பொது விநியோகத் திட்டத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பாமாயில் கிடைக்கிறதா என்பதை துறை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொது வினியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் மாதம் ஒன்றுக்கு குடும்ப அட்டை தாரர்களுக்கு பாமாயில் வழங்க 15 ஆயிரத்து 600 கிலோ லிட்டர் தேவைப்படுகிறது.
ரேஷன் கடைகளில் மாத இறுதி நாட்களில் பாமாயில் கிடைப்பதில்லை என பொதுமக்களிடமிருந்து அதிக புகார்கள் வந்ததை அடுத்து ஒரு லிட்டர் பாமாயில் 25 ரூபாய்க்கு வழங்க பாமாயில் பாக்கெட்டுகள் கொள்முதல் செய்ய 47 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் மாதம் முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை தங்குதடையின்றி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பாமாயில் வழங்கப்பட உள்ளது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில் பொது விநியோகத் திட்டத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பாமாயில் கிடைக்கிறதா என்பதை துறை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X