search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரேசன் கடைகள்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
    • வெள்ளத்தால் சேதமடைந்த விவரங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த அதீத கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    இதனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இதன்படி, வெள்ளத்தால் சேதமடைந்த விவரங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டது.

    இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகைக்கான டோக்கன் விநியோகம் இன்று தொடங்கியுள்ளது.

    சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட வட்டங்களில் பொதுமக்களுக்கு டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது.

    • கனமழை மற்றும் தாமிரபரணி ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து வட்டங்களில் உள்ள கிராமங்களுக்கும் வழங்கப்படும்.
    • 16 கிராமங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 கிலோ அரிசி மற்றும் ஒரு கிலோ துவரம் பருப்பு நிவாரணமாக வழங்க மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.

    கனமழை மற்றும் தாமிரபரணி ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து வட்டங்களில் உள்ள கிராமங்களுக்கும் வழங்கப்படும். குடும்ப அட்டை அடிப்படையில் பொருட்களை வழங்குவதை கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய, அனைத்து வட்ட அலுவலர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


    நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை, சேரன்மகாதேவி மற்றும் அம்பாசமுத்திரத்தில் 16 கிராமங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    • ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் 1000 முதல் 1,500 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.
    • பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் உதவி தொகை பெற விரிவான ஏற்பாடுகளை உணவு வழங்கல்துறை செய்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் வெள்ளத்தால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டனர். வீட்டில் உள்ள பொருட்கள், உடமைகள், கடுமையாக சேதம் அடைந்தன.

    பெரும்பாலான பகுதிகளில் அதிகளவில் பாதிப்பு இருந்தாலும் ஒரு சில இடங்களில் குறைவாக இருந்தன. இருந்தாலும் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதி மக்களுக்கும் நிவாரண உதவி வழங்கப்படுகிறது.

    தமிழக அரசின் சார்பில் ரூ.6000 நிவாரண உதவி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். சென்னையில் 15 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன.

    வெள்ள நிவாரண நிதி நாளை (17-ந்தேதி) முதல் வழங்கப்படுகிறது. அதற்கு முன்னதாக குடும்ப அட்டைதாரர்களுக்கு நேற்று முதல் டோக்கன் வினியோகிக்கப்படுகிறது. அவரவர் பொருட்கள் வாங்கக் கூடிய ரேஷன் கடைகள் மூலம் டோக்கன் வழங்கப்படுவதால் அந்த பகுதிகளில் நீண்ட வரிசை காணப்படுகிறது.

    சென்னையில் 1000-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன. ஒவ்வொரு கடைகள் முன்பும் பொதுமக்கள் வரிசையில் காத்து நின்றனர். இன்று 2-வது நாளாக டோக்கன் வழங்கப்படுகிறது.

    ஒரு சில ரேஷன் கடைகளில் இன்றுதான் டோக்கன் வினியோகிக்கப்படுகிறது. ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் 1000 முதல் 1,500 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். நாளை முதல் நிவாரண நிதி வழங்கப்படுவதால் இன்று கூட்டம் அலைமோதியது.

    வடசென்னை பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் அதிகாலை 5 மணிக்கே வரிசையில் நிற்க தொடங்கினர். ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள பெரியவர்கள் வரிசையில் உட்கார்ந்து இருந்தனர்.

    நேரம் செல்ல செல்ல வரிசை நீண்டு கொண்டே போனது. ஒரு தெருவில் இருந்து அடுத்த தெருவரை மக்கள் காத்து நின்றனர். காலை 8 மணிக்கே ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கன் கொடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    டோக்கனில் கடையின் பெயர், குடும்ப அட்டைதாரர் பெயர், குடும்ப அட்டை எண், நிவாரண தொகை வழங்கப்படும் நாள், நேரம் போன்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தது. டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்திற்கு ரேஷன் கடைக்கு சென்று நிவாரணத் தொகை பெற வேண்டும்.

    நிவாரணத் தொகை ஒவ்வொரு கடைகளிலும் தினமும் 100 பேர் முதல் 300 பேர் வரை கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி தொடர்ந்து நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது. பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் உதவி தொகை பெற விரிவான ஏற்பாடுகளை உணவு வழங்கல்துறை செய்துள்ளது.

    ஒருசில ரேஷன் கடைகள் முன்பு கூட்டம் அதிகமாக இருப்பதால் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு வரிசையை ஒழுங்குப்படுத்தினர்.

    சென்னை நகரில் எங்கு பார்த்தாலும் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுவதால் மக்கள் கூட்டம் கூட்டமாக உதவிகளை பெற சென்று வருகிறார்கள். ஒவ்வொரு தெருக்களிலும் மக்கள் வரிசையில் நிற்பதை காண முடிகிறது.

    சமுதாய கூடங்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட பல இடங்களில் தி.மு.க., அ.தி.மு.க.வினர் போட்டி போட்டுக் கொண்டு நிவாரண பொருட்களை ஒருபுறம் வழங்கி வருகின்றனர்.

    • ரூ.6000 வெள்ள நிவாரணத் தொகையை பயோமெட்ரிக் முறையில் மட்டுமே வழங்க வேண்டும்.
    • நிவாரண தொகை வழங்கப்பட்டதும் பயனாளர்களின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

    சென்னை:

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டதோடு மின்சாதன பொருட்கள் உள்ளிட்ட உடைமைகளும் சேதம் அடைந்தன.

    இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக ரூ.6,000 நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

    இதற்கான டோக்கன் வருகிற 16-ந்தேதி முதல் வினியோகிக்கப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே இன்று பிற்பகல் முதல் டோக்கன் வழங்கப்படுகிறது.

    நிவாரண நிதி வழங்குவது தொடர்பான நெறிமுறைகளை ரேஷன் கடை ஊழியர்களுக்கு அரசு வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    * நிவாரணத் தொகை விநியோகத்திற்கு ஒவ்வொரு நியாயவிலைக் கடையிலும் நான்கு பணியாளர்கள் பணியமர்த்த வேண்டும்.

    * வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் நிவாரண தொகை வழங்க அறிவுறுத்தல்.

    * ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 7 நாட்களுக்குள் நிவாரண தொகையை வழங்க வேண்டும்.

    * டோக்கன்களை ரேஷன் ஊழியர்கள் தான் நேரில் சென்று வழங்க வேண்டும். மூன்றாம் நபரை பணியில் ஈடுபடுத்தக்கூடாது.

    * டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாளில் வருலும் குடும்ப அட்டைதாரர்களை எக்காரணம் கொண்டும் ரொக்கத் தொகை இல்லையென திருப்பி அனுப்பக்கூடாது.

    * ரூ.6000 வெள்ள நிவாரணத் தொகையை பயோமெட்ரிக் முறையில் மட்டுமே வழங்க வேண்டும்.

    * நிவாரண தொகை வழங்கப்பட்டதும் பயனாளர்களின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

    * தினமும் காலை 9 மணி முதல் 1 மணி வரையும், மதியம் 3 மணி முதல் 5 மணி வரையும் நிவாரண தொகை வழங்கப்படும்.

    • ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது.
    • ரேஷன் கடைகளில் வழங்கப்படும் ரூ. 6 ஆயிரத்தை 500 ரூபாய் நோட்டுகளாக 12 வழங்க வேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

    சென்னை :

    மழை வெள்ள நிவாரணமாக ரூ.6 ஆயிரம் வழங்கப்பட உள்ள நிலையில், வருமான வரி செலுத்துபவர்களில் நடுத்தர குடும்பமாக சிலர் இருந்தால் அவர்களும் தங்களுக்கு ரூ.6 ஆயிரம் பணம் வேண்டும் என்று கருதினால் ரேஷன் கடைகளுக்கு சென்று விண்ணப்பம் எழுதி கொடுக்கலாம். இதற்காக ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது.

    அதில் உள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்து எழுதி கொடுத்தால் ரூ.6 ஆயிரம் பெறுவதற்கு நீங்கள் தகுதியானவரா? இல்லையா? என்பதை அரசு முடிவு செய்து அறிவிக்கும். ரேஷன் கடைகளில் வழங்கப்படும் ரூ. 6 ஆயிரத்தை 500 ரூபாய் நோட்டுகளாக 12 வழங்க வேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

    • மழைநீரால் பாதிப்படைந்த தெருக்கள் எவை, எவை என கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
    • சென்னையில் பெரும்பாலானவர்களுக்கும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் 50 சதவீதம் பேர்களுக்கும் பணம் கிடைத்து விடும் என தெரிகிறது.

    சென்னை:

    மிச்சாங் புயல் மழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டன.

    இதில் சென்னை மாநகரம்-புறநகர் பகுதிகள் தண்ணீரில் தத்தளித்ததால் லட்சக்கணக்கான பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    ஏராளமானோர் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் உடமைகள் அனைத்தும் தண்ணீரில் சேதம் அடைந்து வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டது.

    வெள்ளத்தால் வாழ்வாதாரத்தை இழந்த பொதுமக்களுக்கு வெள்ள நிவாரணமாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த நிவாரணத் தொகையினை பாதிக்கப்பட்டவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கவும் உத்தரவிட்டார்.

    இது மட்டுமின்றி வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.5 லட்சம் வழங்கிடவும் சேதம் அடைந்த குடிசைகளுக்கு ரூ.8 ஆயிரம் வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இது தவிர கால்நடைகள், பயிர்கள், படகுகள் உள்ளிட்ட பல்வேறு சேதங்களுக்கும் நிவாரணம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதில் இப்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்குவதற்கான முன்னேற்பாடுகள் வேகமாக நடைபெற்று வருகிறது.



    இதற்காக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் எந்தெந்த பகுதிகள் மழை வெள்ளத்தால் சேதம் அடைந்தது என்ற விவரங்களை மாவட்ட கலெக்டர்கள் அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளனர்.

    கிராம நிர்வாக அதிகாரிகள், வருவாய் அலுவலர், தாசில்தார் ஆகியோர் வெள்ள சேத பகுதிகளை பார்வையிட்டு அளித்த தகவலின் அடிப்படையில் மாவட்ட கலெக்டர்கள் அரசுக்கு அறிக்கை கொடுத்துள்ளனர். இதன் அடிப்படையில் எந்தெந்த பகுதிகள் முழுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகள் என அதில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மழைநீரால் பாதிப்படைந்த தெருக்கள் எவை, எவை என கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் 16-ந்தேதி முதல் டோக்கன் வினியோகிக்க அரசு முதலில் முடிவு செய்திருந்தது. ஆனால் வருகிற ஞாயிற்றுக்கிழமை நியாயவிலைக் கடைகளில் பணம் வினியோகித்து விடலாம் என்று அரசு கருதுவதால் நாளை முதல் டோக்கன் வினியோகிக்க அரசு இப்போது முடிவு எடுத்துள்ளது. அதன் அடிப்படையில் வியாழன், வெள்ளி, சனி ஆகிய 3 நாட்களும் டோக்கன் வினியோகம் செய்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதில் சென்னையில் பெரும்பாலானவர்களுக்கும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் 50 சதவீதம் பேர்களுக்கும் பணம் கிடைத்து விடும் என தெரிகிறது.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூரில் அனைத்து பகுதிகளுக்கும் பெரும்புதூர் தாலுகாவில் மேவலூர் குப்பம், சிவன்தாங்கல், கட்சிப்பட்டு ஆகிய 3 கிராமங்களுக்கும் பணம் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இங்குள்ளவர்களுக்கு டோக்கன் வழங்கியதும் ஞாயிற்றுக்கிழமை நியாய விலைக் கடைகளுக்கு சென்று ரூ.6 ஆயிரம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் பகுதிகள் வெள்ளம் பாதிக்காத பகுதிகளாக இருப்பதால் இங்குள்ளவர்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் கிடைக்காது.

    குன்றத்தூர், ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவில் மொத்தம் 1 லட்சத்து 35 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.6 ஆயிரம் பணம் கிடைக்க உள்ளது.

    இதனிடையே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ள நிலையில், வசதி படைத்தவர்களுக்கு இந்த பணம் கிடைக்காது என தெரிய வந்துள்ளது.

    வருமான வரி செலுத்துபவர்கள், அரசு அதிகாரிகளில் ஏ.பி. வகையான அதிகாரிகள், மிகப்பெரிய தொழில் அதிபர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நீதிபதிகள் உள்ளிட்ட உயர் பிரிவில் உள்ளவர்கள் வைத்துள்ள ரேஷன் கார்டுகளுக்கு ரூ.6 ஆயிரம் கிடைக்காது என தெரிய வந்துள்ளது.

    • கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த விற்பனைக்கே தக்காளி கிலோ ரூ.100-க்கு இன்று விற்கப்பட்டது.
    • காய்கறி கடைகளில் தக்காளி சில்லரை விற்பனை ரூ.130 முதல் ரூ.150 வரை விற்கப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் தக்காளி விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சற்று குறைந்த நிலையில் மீண்டும் அதிகரித்தது. வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து சென்னைக்கு குறைவாகவே வருவதால் விலையேற்றத்துடன் காணப்படுகிறது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த விற்பனைக்கே தக்காளி கிலோ ரூ.100-க்கு இன்று விற்கப்பட்டது. இதனால் காய்கறி கடைகளில் சில்லரை விற்பனை ரூ.130 முதல் ரூ.150 வரை விற்கப்படுகிறது.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி மாநிலம் முழுவதும் நாளை முதல் 300 ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    ஏற்கனவே சென்னையில் மட்டும் 85 ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், பொதுமக்களின் நலன் கருதி நாளை முதல் மாநிலம் முழுவதும் 300 ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட உள்ளது.

    • மலிவு விலையில் தக்காளி விற்பதால் கூட்டுறவு சங்கங்களுக்கு கிலோவிற்கு ரூ.20 நஷ்டம் ஏற்படுகிறது.
    • கூட்டுறவு சங்கங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை அரசு ஈடு செய்கிறது.

    சென்னை:

    தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னையில் வசித்து வரும் மக்கள் இந்த விலை உயர்வால் பாதிக்காத வகையில் பண்ணை பசுமை கடைகள் மூலமாகவும், 82 ரேஷன் கடைகள் மூலமாகவும் தக்காளி விற்பனை தொடங்கி உள்ளது.

    கூட்டுறவு சங்கங்கள் மூலம் செயல்படும் ரேஷன் கடைகளில் மட்டும் தற்போது தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. வெளிமார்க்கெட்டில் ரூ.100, ரூ.120 வரை விற்கப்பட்டாலும் ரேஷன் கடைகளில் கிலோ ரூ.60-க்கு விற்கப்படுகிறது. ஒருவருக்கு ஒரு கிலோ மட்டுமே வழங்கப்படுகிறது.

    நேற்று ஒரேநாளில் 5 ஆயிரம் கிலோ தக்காளி விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு கடைக்கும் குறைந்த அளவில் தான் தக்காளி வினியோகிக்கப்படுகிறது. இதனால் உடனே விற்று தீர்ந்துவிடுகிறது. 50 சதவீத விலை குறைவாக தக்காளி விற்கப்படுவதால் பொதுமக்கள் ரேஷன் கடைகளில் வரிசையில் காத்து நின்று வாங்கி செல்கின்றனர்.

    நேற்று முதல் விற்பனை தாமதமாக தொடங்கினாலும் இன்று காலை 9 மணி முதல் தக்காளி விற்பனை தொடங்கியது.

    டி.யு.சி.எஸ்., சிந்தாமணி, காஞ்சிபுரம் கூட்டுறவு சங்கம் ஆகியவற்றின் மூலம் சென்னையில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னையில் 100-க்கும் அதிகமான ரேஷன் கடைகள் இருந்த போதிலும் குறிப்பிட்ட பகுதியில் ரேஷன் கடைகளில் மட்டுமே தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.

    இதனால் கூட்டம் அலைமோதுகிறது. எந்த பகுதியில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது என்பதை ஒருவருக்கு ஒருவர் கேட்டு அறிந்துகொண்டதால் இன்று காலையிலேயே ரேஷன் கடைகள் முன்பு கூடத்தொடங்கினர். எல்லா ரேஷன் கடைகளிலும் தக்காளி விற்பனை செய்தால் தான் பொதுமக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். ஏதோ ஒரு சில கடைகளில் மட்டும் விற்பதால் அந்த பகுதிகளுக்கு பெண்கள் நடந்து சென்று வாங்க முடியவில்லை. ஏழை-நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து ரேஷன் கடைகளிலும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    இதற்கிடையில் மலிவு விலையில் தக்காளி விற்பதால் கூட்டுறவு சங்கங்களுக்கு கிலோவிற்கு ரூ.20 நஷ்டம் ஏற்படுகிறது. ஒரு கிலோ தக்காளி அடக்க விலை ரூ.83 ஆகிறது. ஆனால் அரசு ரூ.60-க்கு விற்க முடிவு செய்தது.

    இதனால் கூட்டுறவு சங்கங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை அரசு ஈடு செய்கிறது. அரசு நஷ்டத்தை தாங்கி அனைத்து கடைகளுக்கும் விரிவுபடுத்தினால் நல்லது. சாமான்ய மக்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும் என்று கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தற்காலிகமான தக்காளி விலையேற்றத்தை கட்டுப்படுத்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொண்டு வருகிறது.
    • சட்டவிரோதமாக தக்காளியை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிகை விடப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பண்ணை பசுமை கடையை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் இன்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் தக்காளி விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த கூட்டுறவுத்துறையின் மூலம் செயல்பட்டு வரும், பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு கோடையில் கடும் வெப்பம் நிலவியதால் விவசாயிகள் தக்காளி பயிரிடுவது கணிசமாக குறைந்ததாலும், அண்டை மாநிலங்களிலிருந்து தக்காளி வரத்து குறைந்ததாலும், கடந்த வாரம் முதல் தக்காளி விலை அதிகரித்துள்ளது. தோராயமாக நாள் ஒன்றுக்கு சென்னை, கோயம்பேடு மார்கெட்டிற்கு 800டன் வரையிலான வரக்கூடிய தக்காளி வரத்து தற்போது 300டன் என்ற அளவில் குறைந்துள்ளது. இதனால் வெளிச்சந்தைகளில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.90 முதல் ரூ.100 வரை விற்கப்படுகிறது. இதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில், கூட்டுறவுத்துறையின் மூலம் தமிழகத்தில் செயல்பட்டு வரும் 62 பண்ணை பசுமை நுகர்வோர் பசுமை கடைகள் 3 நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் இன்று முதல் குறைந்தபட்சமாக தக்காளி விலை கிலோ ஒன்றுக்கு ரூ.60 முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலையானது வெளிச்சந்தையுடன் ஒப்பிடுகையில் ரூ.30 முதல் ரூ.40 வரை குறைவானதாகும்.

    திருவல்லிக்கேணி நகர கூட்டுறவுச் சங்கத்தின் கீழ் தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, ராஜா அண்ணாமலைபுரம், கீழ்ப்பாக்கம், பெரியார்நகர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், அம்மா உணவத்திற்கும் தனியாக தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டு உள்ளது.

    இந்த தற்காலிகமான தக்காளி விலையேற்றத்தை கட்டுப்படுத்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொண்டு வருகிறது. மேலும், சட்டவிரோதமாக தக்காளியை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிகை விடப்பட்டுள்ளது. இந்த நிலை நீடித்தால் தமிழ்நாட்டில் உள்ள 35,000-க்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடைகள் மூலம் தக்காளி விற்பனையினை விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மக்களுக்கு தரமான பொருட்கள் கிடைக்கின்றதா என்பதை அதிகாரிகள் மூலம் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றோம்.
    • அரிசி கருப்பு, பழுப்பு நிறத்தில் இருக்க கூடாது என்பதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது.

    கோவை:

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் இன்று நடந்தது.

    கூட்டத்திற்கு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் சக்கரபாணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் முடிந்து 3-வது ஆண்டை நோக்கி செல்கிறோம். மக்களுக்கு தரமான பொருட்களை கொடுக்க முதலஅமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

    மக்களுக்கு தரமான பொருட்கள் கிடைக்கின்றதா என்பதை அதிகாரிகள் மூலம் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றோம். அரிசி கருப்பு, பழுப்பு நிறத்தில் இருக்க கூடாது என்பதில் இந்த அரசு கவனம் செலுத்தி வருகிறது.

    2 வருடங்களில் 16 லட்சம் பேருக்கு குடும்ப அட்டை வழங்கப்பட்டு இருக்கிறது. குடும்ப அட்டை தொலைந்து விட்டால், ரூ.45 செலுத்தி அதன் நகலை பெற முடியும். தகுதியுள்ள அனைவருக்கும் குடும்ப அட்டை கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது.

    சிறுதானிய உணவு திருவிழா அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட உள்ளது.

    அனைத்து நியாய விலை கடைகளிலும் கியூஆர் கோடு முறை விரைவில் நடைமுறைப்படுத்தப்படும். இனி பொருட்களை கியூ ஆர் கோடு முறையில் வாங்கி கொள்ளலாம். அதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்க உள்ளது.

    கோவை மாவட்டத்தில் 536 நியாய விலை கடைகள் வாடகை கட்டிடத்தில் இருக்கின்றது, அவற்றிக்கு சொந்த கட்டிடம் கட்டப்படும்.

    கோதுமையை பொறுத்தவரை 23 ஆயிரம் மெட்ரிக் என்பதை 8 ஆயிரம் டன்னாக மத்திய அரசு குறைத்து விட்டனர். இது தொடர்பாக மத்திய அரசுடன் பேசி கூடுதல் ஒதுக்கீடு கேட்க இருக்கின்றோம்.

    நியாயவிலை கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்குவது அரசின் பரீசிலனையில் இருக்கிறது. கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் முதல்கட்டமாக வழங்க திட்டமிடப்பட்டு இருக்கின்றது. மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை அதிகரிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தி இருக்கின்றோம். இந்த விவகாரத்தில் தமிழக அரசை மத்திய அரசு வஞ்சிக்கின்றது.

    பருப்பு, பாமாயில், சக்கரை போன்றவற்றை எவ்வளவு விலை கொடுத்தும் அரசால் வாங்கி விட முடியும். எதிர்கட்சி என்பதால் மத்திய அரசு தமிழக அரசை வஞ்சிக்கின்றது. கோதுமை, மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு குறைத்து இருக்கின்றது.

    ரேஷன் கடைகளில் இரு விதமான அரிசி விநியோகம் செய்யப்பட்டாலும், மக்கள் எந்த அரிசியை விரும்புகின்றனரோ அதை மட்டுமே கொடுப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்
    • பொது விநியோகத் துறை தகவல்

    வேலுார்:

    வேலுார் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 699 ரேசன் கடைகள் உள்ளன.

    ரேசன் பொருட்கள் பெற வேண்டுமென்றால் அதற்கு ஸ்மார்ட் கார்டு அவசியம். கார்டில் உள்ள குடும்ப உறுப் பினர்களில் ஒருவர் கட்டாயம் விரல் கை வைத்தால் மட்டுமே ரேசன் பொருட்களை வாங்க முடியும். முதியோர்கள் கடைகளுக்கு செல்லும் போது கைரேகை வைக்கும் கருவியில் பல நேரங்களில் கைரேகையை ஏற்று கொள்வது இல்லை.

    இதனால் முதியவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து பல முறை முயற்சி செய்து பொருட்களை வாங்கி செல்கின்றனர். ரேசன் கடையில் உள்ள கருவி கைரேகையை ஏற்றுக் கொள்ளாததால் சிலரால் பொருட்களை வாங்க முடியாத நிலையும் உள்ளது.

    முதியோர்கள் வசதிக்காக பொது விநியோகத் துறை ஒரு திட்டத்தை செயல்படுத்தி உள்ளது.

    அதன்படி மூத்த குடிமக்கள் மட்டும் இருக்கும் ரேசன் கார்டுகளுக்கு பொருட்களை வாங்க நண்பங்களையோ அல்லது உறவினர்களையோ நியமித்து கொள்ளலாம். இதற்காக ஒரு விண்ணப்ப படிவம் வட்டார வழங்கல் அலுவலகங்களில் வழங்கப்படுகிறது.

    அதில் ரேசன் கார்டு எண், உறுப் பினர்கள் விவரம், செல்போன் எண், என்ன காரணத்திற்காக பொருட்களை பெற முடியவில்லை. அத்தியா வசிய பொருட்களை பெற நியமிக்கப்படும் பெயர், ரேசன் கார்டு எண் ஆகியவற்றை குறிப்பிட்டு வட்டார வழங்கல் அதிகாரியின் சான்று பெற்று ரேசன் கடையில் வழங்க வேண்டும்.

    அவர்கள் நியமிக்கும் நபர் ஸ்மார்ட் கார்டுடன் ரேசன் பொருட்களை வாங்க வரும்போது பதிவு செய்ய பட்ட செ ல்போனுக்கு. ஓ.டி.பி வரும்.

    அதை அவர்கள் கூறினால் ரேஷன் பொருட்கள் மூத்த குடி மக்கள் நியமித்த நருக்கு வழங்கப்படும் என தெரிவித்தனர்.

    • தமிழகம் முழுவதும் உள்ள ரேசன் அட்டைதாரர்களில் 14.86 லட்சம் ரேசன் அட்டைதாரர்களுக்கு வங்கிக் கணக்கு எதுவும் இல்லை.
    • பலர் வங்கிக் கணக்கு வைத்திருந்தாலும், ஆதார் நம்பரை இணைக்காததால், வங்கிக் கணக்கு இல்லை என்றே தரவுகள் தெரிவிக்கின்றன.

    சென்னை:

    வருகிற பொங்கல் பண்டிகைக்காக இந்த முறை ரேசன் கடைகளில் பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகி வருகிறது.

    இந்த பணத்தை கையில் கொடுக்காமல் ரேசன் கார்டுதாரர்களின் வங்கி கணக்கில் செலுத்த அரசு ஆலோசித்து வருகிறது. இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் பலமுறை ஆலோசனை நடத்தி உள்ளார்.

    பொங்கல் பணம் வழங்குவதற்கு வசதியாக ரேசன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் வங்கி கணக்கு உள்ளதா? என ஆய்வு செய்யப்பட்டது. இதில் 14,86,582 பேருக்கு வங்கி கணக்கு இல்லாதது தெரியவந்தது.

    எனவே வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு மத்திய கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடக்க தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு அதிகாரிகளை அரசு அறிவுறுத்தி உள்ளது.

    இதுதொடர்பாக தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ.சண்முக சுந்தரம், அனைத்து மண்டல இணைப் பதிவாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நேற்று காலையில் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகம் முழுவதும் உள்ள ரேசன் அட்டைதாரர்களில் 14.86 லட்சம் ரேசன் அட்டைதாரர்களுக்கு வங்கிக் கணக்கு எதுவும் இல்லை. இவர்களில் பலர் வங்கிக் கணக்கு வைத்திருந்தாலும், ஆதார் நம்பரை இணைக்காததால், வங்கிக் கணக்கு இல்லை என்றே தரவுகள் தெரிவிக்கின்றன.

    இவர்களில் யாராவது ஏற்கனவே வங்கிக் கணக்கு வைத்திருந்தால் அதன் விவரங்களை பெறவும், கணக்கு இல்லாதவர்களுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் 'ஜீரோ பாலன்ஸ்' (பணமில்லாத) வங்கிக் கணக்கை தொடங்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்த உத்தரவை பின்பற்றுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள், சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்படுகின்றன. வங்கிக் கணக்கு எண் இல்லாத ரேசன் அட்டைதாரர்களுக்கு விவரக் குறிப்புகள் அடங்கிய தாளுடன் சேர்த்து, அருகில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக் கிளையை நேரில் அணுகி 'ஜீரோ பாலன்ஸ்' கணக்கை தொடங்க வேண்டும்.

    அந்த விபரங்கள் அடங்கிய படிவத்தை பூர்த்தி செய்து 4 நாட்களுக்குள் அந்தந்த ரேசன் கடைகளில் ஒப்படைக்க வேண்டும். ஏற்கனவே வங்கி கணக்கு எண் வைத்திருந்தால், சம்பந்தப்பட்ட ரேசன் கடைப் பணியாளர் அவர்களது பகுதியின் கீழ் வரும் ரேசன் அட்டைதாரர்களின் வீடுகளுக்கு நேரிடையாக சென்று, அவர்களின் வங்கி கணக்கு எண், பாஸ் புத்தகத்தின் முதல் பக்கத்தின் நகல் மற்றும் அவற்றுடன் ரேசன் அட்டை நம்பர், குடும்பத் தலைவர் பெயர் ஆகியவற்றை குறிப்பிட்டு வழங்கும்படி அவர்களை அறிவுறுத்தி, அந்தத் தகவல்களை கேட்டுப் பெறவேண்டும்.

    30.11.2022 அன்று வெளியிடப்பட்ட கடிதத்தில் கீழ்கண்ட முக்கியமான திருத்தம் வெளியிடப்படுகிறது. ஏற்கனவே வங்கி கணக்கு எண் வைத்துள்ள குடும்ப அட்டைதாரர்கள் தொடர்பாக பின்பற்ற வேண்டிய நடைமுறை கீழ்கண்டவாறு திருத்தம் செய்து உத்தரவிடப்படுகிறது.

    14,86,582 குடும்ப அட்டைதாரர்களில் ஏற்கனவே வங்கி கணக்கு வைத்துள்ள வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க சொல்லி அறிவுரை வழங்கினால் மட்டுமே போதுமானது. அவர்கள் குறித்து வேறு எந்த தகவல்களையும் பெற வேண்டியது இல்லை.

    வங்கி கணக்கு எண் இல்லாதவர்களை பொறுத்தவரையில் நேற்று வெளியிடப்பட்ட நடைமுறையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    ×