என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தொண்டையில் நிலக்கடலை சிக்கி குழந்தை உயிரிழப்பு
Byமாலை மலர்1 Oct 2020 3:46 AM GMT (Updated: 1 Oct 2020 3:46 AM GMT)
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே தொண்டையில் நிலக்கடலை சிக்கி குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள செங்குளத்துபட்டியை சேர்ந்தவர் விஜய்(வயது 25). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ரேவதி(22). இந்த தம்பதிக்கு தர்ஷனா என்ற 1½ வயது குழந்தையும், 2½ மாதத்தில் மற்றொரு பெண் குழந்தையும் உள்ளனர். கடந்த 28-ந்தேதியன்று குழந்தை தர்ஷனா, வீட்டில் இருந்த நிலக்கடலையை தோலோடு விழுங்கி விட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக தர்ஷனாவின் தொண்டையில் நிலக்கடலை தோல் சிக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மூச்சு விட முடியாமல் தர்ஷனா மயங்கி விழுந்தாள்.
இதனையடுத்து அவளை பெற்றோர், சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை தர்ஷனா நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தது.
இதுகுறித்து ரேவதி கொடுத்த புகாரின் பேரில் வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள செங்குளத்துபட்டியை சேர்ந்தவர் விஜய்(வயது 25). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ரேவதி(22). இந்த தம்பதிக்கு தர்ஷனா என்ற 1½ வயது குழந்தையும், 2½ மாதத்தில் மற்றொரு பெண் குழந்தையும் உள்ளனர். கடந்த 28-ந்தேதியன்று குழந்தை தர்ஷனா, வீட்டில் இருந்த நிலக்கடலையை தோலோடு விழுங்கி விட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக தர்ஷனாவின் தொண்டையில் நிலக்கடலை தோல் சிக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மூச்சு விட முடியாமல் தர்ஷனா மயங்கி விழுந்தாள்.
இதனையடுத்து அவளை பெற்றோர், சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை தர்ஷனா நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தது.
இதுகுறித்து ரேவதி கொடுத்த புகாரின் பேரில் வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X