search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்வர் பழனிசாமி
    X
    முதல்வர் பழனிசாமி

    தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

    ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. மத்திய அரசின் வழிகாட்டுதல்படி படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    இந்த மாத தொடக்கத்தில் மாவட்டங்களுக்குள் பொதுப்போக்குவரத்து, மாவட்டம் விட்டு மாவட்டம் பேருந்து மற்றும் ரெயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது.

    இந்நிலையில், நாளையுடன் பொது முடக்கம் நிறைவடைய உள்ள நிலையில், தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.

    தளர்வுகளால் கொரோனா பரவல் எப்படி உள்ளது என்பது பற்றியும், மாவட்டங்களில் கொரோனா சிகிச்சை உபகரணங்கள் குறித்தும் ஆலோசிக்கிறார்.

    திரையரங்குகள், பள்ளி-கல்லூரிகள் திறப்பு மற்றும் புறநகர் ரெயில் சேவை தொடங்குவது பற்றி முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    முன்னதாக, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று காலை ஆலோசனை நடத்தினார். 
    Next Story
    ×