search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்டு
    X
    சென்னை ஐகோர்ட்டு

    மெரினாவில் மக்களை அனுமதிப்பது குறித்து என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது? - ஐகோர்ட் கேள்வி

    மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் மக்களை அனுமதிப்பது குறித்து என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது? என்று சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
    சென்னை:

    ஊரடங்கால் மூடப்பட்ட மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் மக்களை அனுமதிப்பது குறித்து என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது? என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

    இதுதொடர்பாக அக்டோபர் 5-ம் தேதி விளக்கமளிக்க தமிழக அரசு, சென்னை மாநகராட்சிக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    மேலும், மெரினா கடற்கரையில் தள்ளுவண்டி கடைகளுக்கான டெண்டர் கோரியது குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
    Next Story
    ×