search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கொரோனா வைரஸ் குறித்த சிறப்பு மருத்துவ முகாம்

    நொய்யல் அருகே தவுட்டுப்பாளையத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் கொரோனா வைரஸ் குறித்த சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
    நொய்யல்:

    தவுட்டுப்பாளையத்தில் உள்ள சமுதாயக் கூடத்தில் கொரோனா வைரஸ் குறித்த சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சுமதி தலைமையிலான மருத்துவக்குழுவினர், பொதுமக்களுக்கு ரத்த பரிசோதனை, ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறித்தும் பரிசோதனை செய்தனர். 

    சளி மாதிரி எடுத்தனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டது, அவற்றை பரிசோதனைக்காக கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு உரிய மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது. முகாமில் சுகாதாரத்துறையினர், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×