search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    வாடிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்- 2 வாலிபர்கள் பலி

    வாடிப்பட்டி அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதியதில் 2 வாலிபர்கள் பலியாயினர்.
    வாடிப்பட்டி:

    மதுரை கருப்பாயூரணி வீரபாண்டி நகரைச் சேர்ந்தவர் சூர்யா (வயது 20). இவரது நண்பர் ஆண்டார்கொட்டாரம் மஸ்தான்பட்டியை சேர்ந்த அஜய் என்ற ஆனந்த பாண்டியன் (20). இவர்கள் இருவரும் நேற்று முன் தினம் அதிகாலை மோட்டார் சைக்கிளில் கொடைக்கானலுக்கு சென்றனர்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மதுரைக்கு வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை சூர்யா ஓட்டி வந்தார். அஜய் என்ற ஆனந்த பாண்டியன் பின்னால் அமர்ந்து வந்தார். இரவு 7 மணிக்கு வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டை கல்லுக்காடு பிரிவில் வந்தபோது மதுரையிலிருந்து வந்த டிப்பர் லாரி திரும்பியபோது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் சம்பவ இடத்திலேயே சூர்யா ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். படுகாயமடைந்த அஜய் என்ற ஆனந்த பாண்டியன் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை 7 மணிக்கு உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வாடிப்பட்டி இன்ஸ்பெக்டர் சில்வியா ஜாஸ்மின், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
    Next Story
    ×