என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாடிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்- 2 வாலிபர்கள் பலி
Byமாலை மலர்22 Sep 2020 10:15 AM GMT (Updated: 22 Sep 2020 10:15 AM GMT)
வாடிப்பட்டி அருகே மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதியதில் 2 வாலிபர்கள் பலியாயினர்.
வாடிப்பட்டி:
மதுரை கருப்பாயூரணி வீரபாண்டி நகரைச் சேர்ந்தவர் சூர்யா (வயது 20). இவரது நண்பர் ஆண்டார்கொட்டாரம் மஸ்தான்பட்டியை சேர்ந்த அஜய் என்ற ஆனந்த பாண்டியன் (20). இவர்கள் இருவரும் நேற்று முன் தினம் அதிகாலை மோட்டார் சைக்கிளில் கொடைக்கானலுக்கு சென்றனர்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மதுரைக்கு வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை சூர்யா ஓட்டி வந்தார். அஜய் என்ற ஆனந்த பாண்டியன் பின்னால் அமர்ந்து வந்தார். இரவு 7 மணிக்கு வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டை கல்லுக்காடு பிரிவில் வந்தபோது மதுரையிலிருந்து வந்த டிப்பர் லாரி திரும்பியபோது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே சூர்யா ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். படுகாயமடைந்த அஜய் என்ற ஆனந்த பாண்டியன் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை 7 மணிக்கு உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வாடிப்பட்டி இன்ஸ்பெக்டர் சில்வியா ஜாஸ்மின், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மதுரை கருப்பாயூரணி வீரபாண்டி நகரைச் சேர்ந்தவர் சூர்யா (வயது 20). இவரது நண்பர் ஆண்டார்கொட்டாரம் மஸ்தான்பட்டியை சேர்ந்த அஜய் என்ற ஆனந்த பாண்டியன் (20). இவர்கள் இருவரும் நேற்று முன் தினம் அதிகாலை மோட்டார் சைக்கிளில் கொடைக்கானலுக்கு சென்றனர்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மதுரைக்கு வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை சூர்யா ஓட்டி வந்தார். அஜய் என்ற ஆனந்த பாண்டியன் பின்னால் அமர்ந்து வந்தார். இரவு 7 மணிக்கு வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டை கல்லுக்காடு பிரிவில் வந்தபோது மதுரையிலிருந்து வந்த டிப்பர் லாரி திரும்பியபோது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே சூர்யா ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். படுகாயமடைந்த அஜய் என்ற ஆனந்த பாண்டியன் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை 7 மணிக்கு உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வாடிப்பட்டி இன்ஸ்பெக்டர் சில்வியா ஜாஸ்மின், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X