search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர்கள் உயிரிழப்பு"

    • அதகபாடி என்கிற இடத்தில் வந்தபோது லாரி ஒன்று இருசக்கர வாகனத்தில் உரசியது.
    • சிலம்பரசனை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், இண்டூர் அடுத்துள்ள ராஜாகொல்லஅள்ளி பகுதியை சேர்ந்தவர் மாதேஷ். இவரது மகன் அஜித் (வயது19), அதே பகுதியை சேர்ந்த சின்னபையன் மகன் சிலம்பரசன் (20), நாகராஜ் மகன் அஜய் (17) ஆகிய 3 பேரும் நேற்று இருசக்கர வாகனத்தில் தருமபுரி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அதகபாடி என்கிற இடத்தில் வந்தபோது லாரி ஒன்று இருசக்கர வாகனத்தில் உரசியது. இதில் நிலை தடுமாறி சாலையில் விழுந்தனர்.

    அப்போது பின்னால் வந்த கார் எதிர்பாராத விதமாக இருசக்கரம் வாகனம் மீது ஏறி இறங்கியது. இதில் அஜித் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    விபத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த சிலம்பரசனை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இந்த விபத்து குறித்து இண்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    விபத்தில் இறந்த அஜித் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    நேற்றிரவு சிகிச்சை பலனின்றி சிலம்பரசன் உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து இண்டூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழரசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • இறந்த வாலிபர் கருப்பு நிற ஜீன்ஸ், சந்தன நிறம் மற்றும் ஆரஞ்சு நிறத்தில் 2 சர்ட் அணிந்திருந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு ரெயில்வே போலீஸ் எல்லைக்குட்பட்ட காவிரி ரெயில்வே நிலைய தண்டவாள பகுதியில் வாலிபர் ஒருவர் ரெயில் மோதி இறந்து கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதன்பேரில் ஈரோடு ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    இதில் இறந்தவர் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஐந்துபனை பகுதியை சேர்ந்த சர்க்கரை ஆலையில் தொழிலாளியாக வேலை பார்க்கும் தமிழரசன்(27) என்பதும், சம்பவ இடத்தில் தண்டவாளத்தை கவனக்குறைவாக கடக்க முற்பட்டபோது அவ்வழியாக வந்த ரெயில் மோதி இறந்திருப்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து தமிழரசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் ஈரோடு மாவட்டம் கொடுமுடி ரெயில்வே நிலைய தண்டவாள பகுதியில் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இறந்து கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் இறந்தவருக்கு சுமார் 35 வயது இருக்கும் எனவும், தண்டவாளத்தை கவனக்குறைவாக கடக்க முற்பட்டபோது அவ்வழியாக வந்த ரெயில் மோதி இறந்திருப்பதும் தெரியவந்தது.

    ஆனால், இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இறந்த வாலிபர் கருப்பு நிற ஜீன்ஸ், சந்தன நிறம் மற்றும் ஆரஞ்சு நிறத்தில் 2 சர்ட் அணிந்திருந்தார். இறந்து போன வாலிபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×