search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    தர்மபுரி அருகே சிறுமியிடம் சில்மிஷம்- 2 பேர் கைது

    தர்மபுரி அருகே 15 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள்.
    தர்மபுரி:

    தர்மபுரி அருகே ஏ.கொல்லஅள்ளி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியிடம் கொட்டாய் மேடு பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சிறுமியின் தந்தை தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரத்தினகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது கொட்டாய் மேடு பகுதியைச் சேர்ந்த விஷ்ணு (வயது 23), கோவிந்தன் (35), வெங்கடேஷ் (28), தேவராஜ் (22) ஆகிய 4 பேரும் சிறுமியிடம் சில்மிஷம் செய்தது தெரியவந்தது. 

    இதைத்தொடர்ந்து போலீசார் விஷ்ணு, கோவிந்தன் ஆகிய 2 பேரையும் போக்கோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் தலைமறைவான 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×