என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தர்மபுரி அருகே சிறுமியிடம் சில்மிஷம்- 2 பேர் கைது
Byமாலை மலர்20 Sep 2020 8:28 AM GMT (Updated: 20 Sep 2020 8:28 AM GMT)
தர்மபுரி அருகே 15 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்த 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள்.
தர்மபுரி:
தர்மபுரி அருகே ஏ.கொல்லஅள்ளி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியிடம் கொட்டாய் மேடு பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சிறுமியின் தந்தை தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரத்தினகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அப்போது கொட்டாய் மேடு பகுதியைச் சேர்ந்த விஷ்ணு (வயது 23), கோவிந்தன் (35), வெங்கடேஷ் (28), தேவராஜ் (22) ஆகிய 4 பேரும் சிறுமியிடம் சில்மிஷம் செய்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் விஷ்ணு, கோவிந்தன் ஆகிய 2 பேரையும் போக்கோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் தலைமறைவான 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X