search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருமணம் செய்வதாக கூறி பெண்ணை ஏமாற்றியவர் கைது

    அவினாசி அருகே திருமணம் செய்வதாக கூறி பெண்ணை ஏமாற்றியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அவினாசி:

    கோவை மாவட்டம் சூலூர் மதுரை வீரன் கோவில் வீதியைச் சேர்ந்த குமார் என்பவரது மகள் சுகந்தி (20). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த ஆலாம்பாளையத்தில் உள்ள ஒரு கோவில் திருவிழாவிற்கு வந்தார். அப்போது ஆலாம்பாளையம் ஏ.டி.காலனி பகுதியை சேர்ந்த அவினாசி என்பவரது மகன் சதீஷ்குமார் (26) என்பவருடன் நட்பாக பழகி வந்தார். பின்னர் அதுவே அவர்கள் இடையே காதலாக மாறியது.

    இந்தநிலையில் சதீஷ்குமாரிடம் சுகந்தி தன்னை திருமணம் செய்யும்படி கூறியதாக தெரிகிறது. இதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த சுகந்தி அவினாசி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்து திருப்பூர் மாவட்ட கிளைசிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×