என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மகளின் வளைகாப்புக்காக வந்த போது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலி
Byமாலை மலர்17 Sep 2020 10:14 AM GMT (Updated: 17 Sep 2020 10:14 AM GMT)
திருச்சி அருகே மகளின் வளைகாப்புக்காக வந்த போது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி:
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் சூரக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி மணிமேகலை (வயது 49). இவர்களின் மகள் சரண்யா (27). திருச்சி கல்லறைமேட்டுத்தெருவை சேர்ந்த கண்ணனுக்கு, சரண்யாவை திருமணம் செய்து கொடுத்திருந்தனர். இந்தநிலையில் தற்போது சரண்யா நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். அவருக்கு வருகிற 20-ந்தேதி வளைகாப்பு நடத்தி, சொந்த ஊருக்கு அழைத்து செல்ல பெற்றோர் ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக மணிமேகலை காரைக்காலில் இருந்து கும்பகோணம் வந்தார்.
பின்னர் அங்கிருந்து தனது மருமகன் கண்ணனின் மோட்டார் சைக்கிளில் திருச்சிக்கு வந்துகொண்டிருந்தார். கல்லணை மெயின்ரோட்டில் திருவளர்ச்சோலை அருகே வந்த போது, மணிமேகலை திடீரென மயங்கி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மணிமேகலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருச்சி ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X