என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
முதல்-அமைச்சர் 22-ந் தேதி வருகை: தூத்துக்குடியில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
தூத்துக்குடி:
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரவல் நிலை, தடுப்பு நடவடிக்கைகள், அரசின் வளர்ச்சி திட்டப்பணிகள், புதிய திட்டங்கள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வளர்ச்சிப்பணிகள், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் கடந்த மாதம் 7-ந் தேதி நடைபெற்றது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட கொரோனா பரவல் நிலை, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம் வருகிற 22-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 3.30 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.
இதில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ராமநாதபுரத்தில் இருந்து கார் மூலமாக தூத்துக்குடி வருகிறார்.
ஆய்வு கூட்டத்தை தொடர்ந்து மாவட்டத்தில் முடிக்கப்பட்ட திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். மேலும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் பேசுகிறார்.
முதல்-அமைச்சர் வருகையையொட்டி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முழுவதும் புதியதாக பெயிண்ட் அடிக்கப்பட்டு பளிச்சென காட்சியளிக்கிறது.
மேலும் கலெக்டர் அலுவலக வளாகம் தூய்மை படுத்தப்பட்டு, புதிதாக சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கலெக்டர் அலுவலகத்தின் உள்ளே பூச்செடிகள் மற்றும் நுழைவுவாயில் பகுதிகளில் புதியதாக இரும்பு கிரில்கள் அமைத்து அழகுபடுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், துறை தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி செய்து வருகிறார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் தூத்துக்குடி வருவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் எடுக்கப்பட்டு வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்