search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீசார் விசாரணை
    X
    போலீசார் விசாரணை

    பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்த பள்ளிக்கூட ஊழியர்- போலீசார் விசாரணை

    பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்த பள்ளிக்கூட ஊழியர் உடலை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    எட்டயபுரம்:

    எட்டயபுரம் பாரதியார் தெருவை சேர்ந்த பத்மநாபன் என்பவருடைய மகன் பார்த்தசாரதி என்ற சதீஷ் (வயது 47). இவர் எட்டயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவி வரலட்சுமி மற்றும் குடும்பத்தினருடன் மயிலாடுதுறைக்கு சென்றார். பின்னர் இவர் மட்டும் தனியாக நேற்று முன்தினம் அதிகாலை எட்டயபுரம் வந்தார். அதைத்தொடர்ந்து இரவு 7 மணி வரை கதவு திறக்கவில்லை.

    இந்த நிலையில் மனைவி மற்றும் உறவினர்கள் பலமுறை செல்போன் மூலம் அழைத்து பார்த்தும் எடுக்கவில்லை. இதையடுத்து வரலட்சுமி, அக்கம்பக்கத்தில் உள்ளவரிடம் செல்போனில் பேசி கேட்டபோது, வீட்டின் உள்ளே தாழ்ப்பாள் போடப்பட்டுள்ளது என்று கூறினர். பின்னர் அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, குளியலறை அருகே உள்ள வாறுகாலில் பார்த்தசாரதி பிணமாக கிடந்தது தெரியவந்தது. தகவல் அறிந்ததும் எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இன்ஸ்பெக்டர் கலா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×