என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காத 15 பேருக்கு அபராதம்
Byமாலை மலர்13 Sep 2020 1:51 PM GMT (Updated: 13 Sep 2020 1:51 PM GMT)
கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காத 15 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி கூறியதாவது:-
தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கொரோனா விதிமுறையை கடைபிடிக்க வேண்டும் இல்லாவிட்டால் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500-ம், முககவசம் அணியாவிட்டால் ரூ.200-ம், சுகாதார துறையால் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே வந்தால் ரூ.500, பொது இடங்களில் சமூக இடைவெளி கடை பிடிக்காவிட்டால் ரூ.500, வணிக வளாகம், சலூன் கடை, மசாஜ்சென்டர், உடற்பயிற்சி கூடங்களில் கொரோனா விதி மீறினால் ரூ.5 ஆயிரம், சுகாதார துறையால் தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து வெளியே வந்தால் ரூ.500, தடை செய்யப்பட்ட பகுதிகளில் வணிக நிறுவனங்கள் செயல்பட்டால் ரூ.5 ஆயிரம் அபராதமாக சுகாதார துறை அல்லது காவல்துறை, நகராட்சி மூலம் அபராதம் விதிக்கப்படும் அப்படி அபராதம் செலுத்தாதவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி வெள்ளகோவிலில் நேற்று கொரோனா விதிமுறைகளை மீறிய சமூக இடைவெளி, முககவசம் அணியாத 15 பேருக்கு ரூ.3 ஆயிரம் சுகாதார துறை சார்பில் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X