search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஆலங்குளம் அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது

    ஆலங்குளம் அருகே கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தென்காசி:

    ஆலங்குளம் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்தின் பேரில் அங்கு நின்றவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரனையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த சேர்மன்(30) மற்றும் நல்லூரை சேர்ந்த அலெக்சாண்டர்(25) என்பதும், அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    அதேபோல் சொக்கம்பட்டி போலீசார் திருவேட்டநல்லூர் பகுதியில் கஞ்சா விற்ற மாரியப்பனை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 120 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×