என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உத்தமபாளையம் அருகே 10 கிலோ கஞ்சா பறிமுதல் - வாலிபர் கைது
Byமாலை மலர்7 Sep 2020 11:51 AM GMT (Updated: 7 Sep 2020 11:51 AM GMT)
உத்தமபாளையம் அருகே 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
உத்தமபாளையம்:
உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் முனியம்மாள் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பியோடினர். இதையடுத்து அவர்களை போலீசார் விரட்டி சென்றனர். இதில் ஒருவர் மட்டும் சிக்கினார். மற்றொருவர் கையில் வைத்திருந்த பையை வீசி எறிந்துவிட்டு தப்பி ஓடி விட்டார். எனவே பிடிபட்டவரிடம் போலீசார் விசாரணை செய்தனர்.
இதில் அவர் கம்பம் வடக்குபட்டியை சேர்ந்த மனோகரன் (வயது 34) என்பதும், தப்பி ஓடியவர் அதே பகுதியை சேர்ந்த சிவா என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து சிவா வீசிய பையை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில் 10 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோகரனை கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே 2 கொலை வழக்குகளும் 10-க்கும் மேற்பட்ட கஞ்சா கடத்தல் வழக்குகளும் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தப்பி ஓடிய சிவாவை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X