search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்ப்பாட்டம்
    X
    ஆர்ப்பாட்டம்

    விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    லாலாபேட்டையை அடுத்த பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    லாலாபேட்டை:

    லாலாபேட்டையை அடுத்த பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி முன்பு நேற்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நீட்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கரூர் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் மணிகண்டன் தலைமை வகித்தார். விவசாய அணி மகாமுனி முன்னிலை வகித்தார். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×