search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜிகே வாசன்
    X
    ஜிகே வாசன்

    சட்டமன்ற தேர்தலுக்கு த.மா.கா. தயாராக வேண்டும்- தொண்டர்களுக்கு ஜிகே வாசன் வேண்டுகோள்

    வருகிற சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை செய்ய, தயாராக இருப்போம் என்று தொண்டர்களுக்கு ஜிகே வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    சென்னை:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இன்று நமது நெஞ்ச மெல்லாம் நிறைந்திருக்கின்ற மக்கள் தலைவர் ஜி.கே. மூப்பனாரின் 19-ம் ஆண்டு நினைவு நாள் தமிழகம் முழவதும் த.மா.காவின் தலைவர்கள், தொண்டர்கள், அவரது நினைவைப் போற்றும் லட்சக் கணக்கான நல்ல உள்ளங்கள், இன்று இல்லங்களியே தலைவரின் படத்திற்கு புகழஞ்சலி செலுத்துகிறீர்கள். அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி.

    த.மா.கா மக்கள் விரும்பும் இயக்கம், மக்கள் நலன் காக்கும் இயக்கம் என்பதை நிருபிக்கும் வகையில் மக்கள் தலைவர் ஜி.கே. மூப்பனாரின் நினைவுநாளை இல்லங்களிலேயே அவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.

    அதனை செயல்படுத்தி கொண்டு இருக்கின்றீர்கள். தொடர்ந்து மக்கள் பணி, இயக்கப்பணி இரண்டையும், இரு கண்களாக நினைத்து செயல்படும் தங்கள் அனைவருக்கும் என் நல் வாழ்த்துக்கள். வருகிற சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை செய்ய, தயாராக இருப்போம். அதனை வெற்றிகரமாக மேற்கொள்வோம். சட்ட மன்றத்தில் த.மா. காவின் குரலை ஒலிக்க செய்வோம். வளமான தமிழகம், வலிமையான பாரதம் ஏற்படுத்துவோம். மக்கள் தலைவர், பெருந்தலைவர் புகழ் பாடுவோம், அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்க இந்நாளில் உறுதியேற்போம்.

    இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    Next Story
    ×