search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலை தடுப்பு சுவரில் லாரி மோதி நிற்கும் காட்சி.
    X
    சாலை தடுப்பு சுவரில் லாரி மோதி நிற்கும் காட்சி.

    அவினாசி அருகே சாலை தடுப்பு சுவரில் லாரி மோதல்- டிரைவர் தப்பினார்

    அவினாசி அருகே சாலை தடுப்பு சுவரில் லாரி மோதிய விபத்தில் டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார்.
    அவினாசி:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நேற்று அதிகாலை டீத்தூள் பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு கன்டெய்னர் லாரி கொல்கத்தா நோக்கி சென்றுகொண்டிருந்தது. லாரியை வடமாநிலத்தை சேர்ந்த டிரைவர் ஓட்டிச்சென்றார். அதிகாலை 5 மணியளவில் அவினாசி ஆட்டையாம்பாளையம் அருகே லாரி வந்து கொண்டிருந்தது.

    அப்போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி நிலைதடுமாறி ஓடி சாலையின் மையத்தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரியின் முன்பகுதி சேதமடைந்தது. லாரி டிரைவர் காயமின்றி உயிர்தப்பினார். பின்னர் கிரேன் மூலம் விபத்துக்குள்ளான லாரி அப்புறப்படுத்தப்பட்டது. இதுகுறித்து அவினாசி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×