என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அவினாசி அருகே சாலை தடுப்பு சுவரில் லாரி மோதல்- டிரைவர் தப்பினார்
Byமாலை மலர்16 Aug 2020 12:24 PM GMT (Updated: 16 Aug 2020 12:24 PM GMT)
அவினாசி அருகே சாலை தடுப்பு சுவரில் லாரி மோதிய விபத்தில் டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார்.
அவினாசி:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நேற்று அதிகாலை டீத்தூள் பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு கன்டெய்னர் லாரி கொல்கத்தா நோக்கி சென்றுகொண்டிருந்தது. லாரியை வடமாநிலத்தை சேர்ந்த டிரைவர் ஓட்டிச்சென்றார். அதிகாலை 5 மணியளவில் அவினாசி ஆட்டையாம்பாளையம் அருகே லாரி வந்து கொண்டிருந்தது.
அப்போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி நிலைதடுமாறி ஓடி சாலையின் மையத்தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரியின் முன்பகுதி சேதமடைந்தது. லாரி டிரைவர் காயமின்றி உயிர்தப்பினார். பின்னர் கிரேன் மூலம் விபத்துக்குள்ளான லாரி அப்புறப்படுத்தப்பட்டது. இதுகுறித்து அவினாசி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X