என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திமிரி அருகே கல்குவாரி குட்டையில் பிணமாக கிடந்த சவர தொழிலாளி
Byமாலை மலர்16 Aug 2020 8:16 AM GMT (Updated: 16 Aug 2020 8:16 AM GMT)
திமிரி அருகே கல்குவாரி குட்டையில் சவர தொழிலாளி பிணமாக கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த கரடிமலை பகுதியில் உள்ள பயன்பாடு இல்லாத கல்குவாரி குட்டையில் தண்ணீர் தேங்கி உள்ளது. அந்தக் குட்டையில் ஒரு ஆண் பிணம் மிதப்பதாக அப்பகுதி மக்கள் திமிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், திமிரியை அடுத்த சாம்பசிவபுரம் பகுதியைச் சேர்ந்த சவர தொழிலாளி சுதாகர் (வயது 35) எனத் தெரிய வந்தது. 13-ந்தேதி வீட்டை விட்டு வெளியில் சென்றவர், பின்னர் வீடு திரும்பவில்லை. கல்குவாரி குட்டையில் தானாக தவறி விழுந்தாரா அல்லது யாரேனும் கொலை செய்து பிணத்தை குட்டையில் வீசினார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X