search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பழனி அருகே குண்டர் சட்டத்தில் 4 பேர் கைது

    பழனி அருகே தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
    பழனி:

    பழனி மயிலாடும்பாறையை சேர்ந்த பிரதீஷ் (வயது 23), ராமநாதநகரை சேர்ந்த குணசேகரன் (24), குபேரபட்டினத்தை சேர்ந்த காளிதாஸ் (24), குரும்பபட்டியை சேர்ந்த சக்திவேல் (24). இவர்கள் மீது பழனி போலீஸ் நிலையத்தில் கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

    இந்தநிலையில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவர்கள் 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமிக்கு, போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா பரிந்துரை செய்தார். அதைத்தொடர்ந்து பிரதீஷ் உள்பட 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். 

    அதையடுத்து பழனி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், அவர்கள் 4 பேரையும் கைது செய்தார். பின்னர் அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழனி அடிவாரத்தில் நடந்த இரட்டை கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×