search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வானிலை ஆய்வு மையம்
    X
    வானிலை ஆய்வு மையம்

    5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

    தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியிருப்பதாவது:

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் திருவள்ளூர், வேலூர், நீலகிரி, கோவை, தேனி ஆகிய 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், தர்மபுரி, திண்டுக்கலில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    தமிழகத்தின் பிற மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் லேசான வானமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக செய்யாறு, தலைஞாயிறு, திருப்பூண்டி தலா 10 செ.மீ. மழைப்பதிவாகி உள்ளது.

    தாமரைப்பாக்கம், கொலப்பாக்கத்தில் தலா 9 செ.மீ., அம்பத்தூர், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டியில் தலா 7 செ.மீ. மழைப்பதிவாகி உள்ளது.

    மீனவர்கள் அடுத்த 2 நாட்களுக்கு குமரிக்கடல், வடதமிழக  கடலோர பகுதிகளுக்கு  செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

    Next Story
    ×