என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்28 July 2020 12:14 PM GMT (Updated: 28 July 2020 12:14 PM GMT)
திருவெண்ணெய்நல்லூர் அருகே சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசூர்:
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பெரியசெவலையில் செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள், நேற்று ஆலையின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்க தலைவர் ரங்கநாதன் தலைமை தாங்கினார். நிர்வாகக்குழு அமைப்பாளர் பழனி, சங்க செயலாளர் அய்யனார், துணை தலைவர் பலராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டமானது, வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக பணியில் சேர்ந்து 34 ஆண்டுகளாக சர்க்கரை ஆலையில் பணிபுரிந்து வரும் 90 தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்யதிட வேண்டும், ஒப்பந்த அடிப்படையில் வெளியாட்களை வேலையில் சேர்ப்பதை கண்டித்தும், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு பணிமூப்பு அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் சாரங்கபாணி, சின்னத்தம்பி, குப்புசாமி, அய்யப்பன், ராஜேந்திரன், ஏழுமலை, ஜோதி, லோகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சங்க பொருளாளர் ஏழுமலை நன்றி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X