search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்"

    • மண்பாண்ட தொழிலாளர்கள் மண்பானை மற்றும் மண் அடுப்புகளுடன் சேலம் கோட்டையில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஆர்ப்பாட்டத்திற்கு குலாலர் சங்க மாவட்ட தலைவர் ராஜா தலைமை தாங்கினார்.

    சேலம்:

    சேலம் மாவட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் மண்பானை மற்றும் மண் அடுப்புகளுடன் சேலம் கோட்டையில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு குலாலர் சங்க மாவட்ட தலைவர் ராஜா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

    ஆர்ப்பாட்டம் குறித்து அவர்கள் கூறியதாவது:- பொங்கல் திருநாளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்பினை ஆண்டுதோறும் தமிழக அரசு வழங்கி வருகிறது.

    அதேபோல் களி மண்ணால் ஆன மண்பானை மற்றும் அடுப்பினை தமிழக அரசே கொள்முதல் செய்து ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கி மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும். மண்பாண்ட தொழிலாளர்கள் தொழில் செய்ய தேவையான களிமண்ணை அவரவர் வசிக்கும் பகுதியில் உள்ள ஏரிகள், ஆற்றில் எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.

    தமிழக அரசின் காதிகிராப்ட் விற்பனை பிரிவு அலுவலகத்தில் நிரந்தரமாக மண்பாண்டத்தினால் ஆன பொருட்களை விற்பனை செய்ய இடம் ஒதுக்க வேண்டும். மழைக்கால நிவாரண நிதியை மற்ற சமுதாயத்திற்கு கொடுத்தது போல் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். நலிவடைந்த மண்பாண்ட தொழிலாளர்கள் வீடு கட்டி வசிக்க இலவச வீட்டு மனை வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    வேலூர் தலைமை தபால் நிலையம் அருகே ஏ. ஐ.டி.யு.சி ஆட்டோ தொழிலாளர் சங்கம் மற்றும் உழைக்கும் பெண்கள் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    ஏஐடியுசி மாவட்ட செயலாளர் சிம்புதேவன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஆல்வின், உழைக்கும் பெண்கள் மாவட்ட செயலாளர் சரோஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் உணவுப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி உயர்வை திரும்ப பெற வேண்டும். அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும். கட்டணம் உயர்த்தியதை திரும்ப பெற வேண்டும்.

    மாணவி ஸ்ரீ மதியின் மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்து தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் தேவதாஸ் கவுரவத் தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட தலைவர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • பென்னாகரத்தில் போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடந்தது.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் போக்குவரத்து கழக பணிமனை முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் உதயகுமார் தலைமை தாங்கினார்.கிளை செயலாளர் தர்மராஜன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார், வெங்கடேசன், முருகன் ,வெங்கடாஜலபதி, மனோன்மணி ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் போக்கு வரத்து கழகங்களைப் பாதுகாக்க வேண்டும், பொதுப்போக்குவரத்தைப் பலப்படுத்த வேண்டும். தனியார் மய நடவடிக்கை களை முறியடிக்க வேண்டும், ஊதிய ஒப்பந்தத்தை இறுதிப்படுத்த வேண்டும், பேட்டா, இன்சென்டிவ் பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும், ஓய்வுபெற்ற ஊழியர்களின் ஓய்வுகால பலன், அகவிலைப்படி உயர்வு, மருத்துவக்காப்பீடு உடனடியாக வழங்கிட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் கிளை பொருளாளர் முருகன் நன்றி கூறினார்.

    ×