search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    சாத்தான்குளம் வழக்கு- மேலும் 2 சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா

    சாத்தான்குளம் வழக்கில் காவலர்களிடம் விசாரணை நடத்திய குழுவில் இருந்த மேலும் 2 சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
    மதுரை:

    சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து இவ்வழக்கு சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் ஜெயராஜ் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தினர். மேலும் செல்போன் கடை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் சென்று விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக கைதான காவலர்களில் 3 பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

    கடந்த 22-ந்தேதி காவலர்களிடம் விசாரணை நடத்திய குழுவில் இருந்த 2 சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

    இந்த நிலையில், விசாரணை குழுவில் இருந்த மேலும் 2 சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து சிபிஐ அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.

    கடந்த 10-ந்தேதி டெல்லியில் இருந்து 8 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் மதுரை வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×