search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை வானிலை ஆய்வு மையம்
    X
    சென்னை வானிலை ஆய்வு மையம்

    தமிழகத்தில் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்

    தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளதாவது:-

    தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் கன்னியாகுமரி, தென்காசி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35, குறைந்தபட்சம் 27 டிகிரி செல்சிஸ் ஒட்டி இருக்கும்.

    நாளை வட கடலோர தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால், சென்னை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கன்னியாகுமரி, தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், வேலூர், நாமக்கல், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, தர்மபுரி, சேலம், கோவை  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

    மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால் நாளை முதல் வருகிற 26-ந்தேதி வரை தென்கிழக்கு அரபிக்கடல், கேரள கடலோர பகுதிகள், மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் தென் மேற்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம்.  

    இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
    Next Story
    ×