search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக எம்எல்ஏ தங்கபாண்டியன்
    X
    திமுக எம்எல்ஏ தங்கபாண்டியன்

    ராஜபாளையம் திமுக எம்எல்ஏவுக்கு கொரோனா

    ராஜபாளையம் திமுக எம்எல்ஏ தங்கபாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
    விருதுநகர்:

    தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா நோய் பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள், அரசு அலுவலர்கள், ஊழியர்கள், சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்களும் பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கபாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    ஏற்கனவே மனைவி, மகனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்ட நிலையில் தற்போது தங்கபாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

    தமிழகத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என இதுவரை 17 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
    Next Story
    ×