search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ரிஷிவந்தியம் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது

    ரிஷிவந்தியம் அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ரிஷிவந்தியம்:

    ரிஷிவந்தியம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன், அசோக்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குளத்து மேட்டு பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் அதே ஊரை சேர்ந்த மண்ணாங்கட்டி மகன் மணிகண்டன்(வயது 30), ராஜாக்கண்ணு மகன் தேவேந்திரன் என்கிற பட்டாணி(20) என்பதும், கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டன் உள்பட 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×