என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்13 July 2020 1:09 PM GMT (Updated: 13 July 2020 1:09 PM GMT)
திருவள்ளூர் அருகே மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம், மாளந்தூர் ஊராட்சியில் உள்ள அரசினர் ஆரம்ப பள்ளி மற்றும் ரேசன் கடை ஆகியவற்றிற்கு இடையில் டிரான்ஸ்பார்மர் ஒன்று உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மர் மூலம் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த டிரான்ஸ்பார்மர் பொதுமக்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் இடையூறாக உள்ளதாகவும், வேறு இடத்திற்கு மாற்ற கோரியும் அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்து வந்தனர். ஆனால் அதை அகற்ற நடவடிக்கை எடுக்காத நிலையில், கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சண்முகம் தலைமையில் டிரான்ஸ்பார்மரை அகற்ற கோரியும், மின்வாரிய அதிகாரிகளை கண்டித்தும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையறிந்து, சம்பவ இடத்திற்கு ஊராட்சி மன்றத்தலைவர் விஜயன் விரைந்து வந்தார். இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்ததை தொடர்ந்து, அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம், மாளந்தூர் ஊராட்சியில் உள்ள அரசினர் ஆரம்ப பள்ளி மற்றும் ரேசன் கடை ஆகியவற்றிற்கு இடையில் டிரான்ஸ்பார்மர் ஒன்று உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மர் மூலம் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த டிரான்ஸ்பார்மர் பொதுமக்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் இடையூறாக உள்ளதாகவும், வேறு இடத்திற்கு மாற்ற கோரியும் அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்து வந்தனர். ஆனால் அதை அகற்ற நடவடிக்கை எடுக்காத நிலையில், கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சண்முகம் தலைமையில் டிரான்ஸ்பார்மரை அகற்ற கோரியும், மின்வாரிய அதிகாரிகளை கண்டித்தும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையறிந்து, சம்பவ இடத்திற்கு ஊராட்சி மன்றத்தலைவர் விஜயன் விரைந்து வந்தார். இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்ததை தொடர்ந்து, அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X