search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்"

    • பத்மநாபபுரம் அரண்மனையில் ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகை 10 நாட்கள் கொண்டாடப்படும்.
    • பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் விழா நடத்தப்படாததை கண்டித்து பொதுமக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தக்கலை:

    குமரி மாவட்டம் தக்கலையில் உள்ளது பத்மநாபபுரம் அரண்மனை. கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த அரண்மனையை பார்வையிட பொதுமக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். குமரி மாவட்டத்திற்கு சுற்றுலா வரக்கூடிய சுற்றுலா பயணிகள் பத்மநாபபுரம் அரண்மனையையும் பார்வையிட வருவார்கள்.

    பத்மநாபபுரம் அரண்மனையில் ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகை 10 நாட்கள் கொண்டாடப்படும். கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை தொடங்கும்போது இங்கும் பண்டிகை தொடங்கிவிடும். பண்டிகை நாட்களில் அரண்மனை முன்பு ஊஞ்சல் கட்டப்பட்டிருக்கும். அதில் ஆடி மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்.

    ஆனால் பத்மநாபபுரம் அரண்மனையில் இந்த ஆண்டு ஓணம் பண்டிகை கொண்டாடப்படவில்லை. மேலும் ஓணம் பண்டிகையான நேற்று அரண்மனை திறக்கப்படவில்லை. அரண்மனை வாசல் இழுத்து மூடப்பட்டிருந்தது. விடுமுறை நாள் என்பதால் நேற்று வழக்கம் போல் ஏராளமான சுற்றுலா பயணிகள் பத்மநாபபுரம் அரண்மனைக்கு வந்திருந்தனர்.

    அவர்கள் அரண்மனை மூடப்பட்டிருந்தால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஆண்டுதோறும் ஓணம் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு கொண்டாடப்படாதது பத்மநாபபுரம் பகுதி மக்கள் மத்தியிலும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

    பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் விழா நடத்தப்படாததை கண்டித்து பொதுமக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அரண்மனை வாசல் முன்பு திரண்டு நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பத்மநாபபுரம் நகராட்சி துணை தலைவர் உண்ணி கிருஷ்ணன், கவுன்சிலர்கள் வினோத், நாகராஜன், பா.ஜ.க. பிரமுகர்கள் குமரி ரமேஷ், விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    போதிய நிதி இல்லாததால் இந்த ஆண்டு ஓணம் விழா கொண்டாடப்படவில்லை என கேரள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வரும் ஆண்டுகளில் பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் விழா வழக்கம் போல் கொண்டாட கேரள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் வலியுறுத்தினர்.

    • அம்பத்தூர் ரெயில் நிலையத்தை விரிவுபடுத்தி இருமார்க்கத்திலும் செல்லும் விரைவு ரெயில்கள் நின்று செல்ல வேண்டும்.
    • பொதுமக்கள் தண்டவாளத்தை கடந்து செல்லும்போது விபத்தில் சிக்குவதால் 17 அடியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும்.

    அம்பத்தூர்:

    அம்பத்தூர் பொது நல சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று காலை அம்பத்தூர், ஓ.டி.பஸ்நிலையம் அருகே கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    அம்பத்தூரில் கடந்த 20 ஆண்டுக்கு மேல் கிடப்பில் போடப்பட்டு உள்ள பாடி-திருநின்றவூர் சாலை விரிவாக்க பணியை விரைவுபடுத்த வேண்டும். கள்ளிக்குப்பம்-மேனாம்பேடு சர்வீஸ் சாலையை தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்க வேண்டும்.

    அம்பத்தூர் ரெயில் நிலையத்தை விரிவுபடுத்தி இருமார்க்கத்திலும் செல்லும் விரைவு ரெயில்கள் நின்று செல்ல வேண்டும். பொதுமக்கள் தண்டவாளத்தை கடந்து செல்லும்போது விபத்தில் சிக்குவதால் 17 அடியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். அம்பத்தூர் பஸ்நிலையத்தை மேம்படுத்தவேண்டும். அம்பத்தூர் முழுவதும் புதைவட மின்கம்பி அமைத்து தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலிறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

    இதில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியபடி நின்றனர். மேலும், கோரிக்கைகள் குறித்து பேசினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    • பொதுமக்களுக்கு மூச்சு தினறல் ஏற்பட்டது.
    • பொதுமக்கள் சுத்திகரிப்பு நிலையம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது.

    பின்னர் அங்குள்ள சாமான்ன தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்தம் செய்து 33 வார்டு பகுதி மக்களுக்கும் குடிநீர் வினியோகம் செய்யபட்டு வருகிறது. அப்படி சுத்திகரிப்பு செய்யும் போது தண்ணீரினை சுத்தம் செய்ய குளோரின் சரியான விகிதத்தில் நகராட்சி ஊழியர்களால் கலக்கப்படும்.

    இந்த நிலையில் தண்ணீர் சுத்திகரிப்பு செய்ய குளோரின் சிலிண்டரை அங்குள்ள ஊழியர்கள் திறந்தனர். அப்போது அது பயங்கர சப்தத்துடன் வெடித்து குளோரின் கசிவு ஏற்பட்டது. இதனால் அங்கு குடியிருக்கும் மக்களுக்கு மூச்சு தினறல் ஏற்பட்டது. சிலர் மயக்கம் அடைந்தனர்.

    இதனையடுத்து மயக்கமடைந்தவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.இதுகுறித்த தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கசிவினை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த பகுதி மக்கள் சுத்திகரிப்பு நிலையம் முன்பு திடீரென ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறும்போது,குளோரின் சிலிண்டரில் அடிக்கடி சிறிய அளவில் கசிவு ஏற்பட்டு வந்தது.

    இந்தநிலையில் தற்போது அது பெரிய அளவில் ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் பாதித்து உள்ளனர். நகராட்சி ஊழியர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் கூட வழங்கவில்லை என்றனர். பொதுமக்கள் சுத்திகரிப்பு நிலையம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • ஓமலூரில் இருந்து சங்ககிரி வரையிலான நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது.
    • திடீரென தாரமங்கலத்தில் இருந்து சங்ககிரி செல்லும் சாலையில் கால்நடை மருத்துவமனை எதிரில் சாலை பணியை நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தாரமங்கலம்:

    ஓமலூரில் இருந்து சங்ககிரி வரையிலான நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே தாரமங்கலம் நகராட்சி 27 -வது வார்டு பொதுமக்கள் 100- க்கும் மேற்பட்டோர் சம்பவத்தன்று காலை திடீரென தாரமங்கலத்தில் இருந்து சங்ககிரி செல்லும் சாலையில் கால்நடை மருத்துவமனை எதிரில் சாலை பணியை நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது பொதுமக்கள் தங்கள் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக முறையான சாக்கடை வசதியின்றி அவதிப்பட்டு வருவதாகவும், மழைகாலங்களில் நகர பகுதியில் பெருக்கெடுத்து ஓடிவரும் மழைநீரும், சாக்கடை கழிவுகளும் கலந்து குடியிருப்பு வீடுகளில் புகுந்தும் தேங்கியும் வருவதால் இங்கு கடந்த 2 மாதங்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலர் சிகிச்சை பெற்று வருகிறோம் எனவும்,  இந்த நிலையை போக்க இந்த பகுதியில் சுமார் 500 மீட்டர் அளவிற்கு சாக்கடை அமைத்து தரவேண்டும் என்று அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எனவும் கூறினர்.

    இதனால் சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி தலைவர் குணசேகரன், 27 வது -வார்டு கவுன்சிலர் லட்சுமிஈஸ்வரன் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், தாரமங்கலம் காவல் உதவி ஆய்வாளர்கள் காமராஜ், முரளிதரன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது சாக்கடை பணிக்கு உண்டான ஒப்பந்தம் பெறப்படவில்லை என்றும், தற்போது சாலை விரிவாக்க பணிக்கு மட்டுமே பணி நடைபெறுவதால் சாக்கடை பணியை மேற்கொள்ள இயலாது என்று கூறியதால் பொதுமக்கள் மேலும் ஆத்திரம் அடைந்தனர். சாலை விரிவாக்க பணி முடிந்து விட்டால் சாக்கடை பணியை கிடப்பில் போட்டு விடுவார்கள் என்றும், புதிய சாக்கடை அமைக்காமல் சாலை பணியை மேற்கொள்ள விடமாட்டோம் என்று கூறினர்.

    இதையடுத்து சாலை விரிவாக்க பணியை தற்காலிகமாக பணியை அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர். மேலும் பொதுமக்களின் கோரிக்கை குறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறினர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    • உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

    வடவள்ளி,

    கோவை பூலுவபட்டி அருகே உள்ள சித்தரசாவடி பகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு டாஸ்மாக் கடை அமைக்க அரசு முடிவு செய்தபோது, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

    பெண் விவசாய தொழிலாளர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் இந்த வழியாக தான் செல்லகின்றனர். மேலும் அந்த பகுதி வளைவான பகுதி என்பதால் அங்கு விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாலும், டாஸ்மாக் கடை அமைக்க அனுமதிக்க கூடாது என அப்பகுதி பொதுமக்கள் கூறினர்.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அங்கு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதையடுத்து அங்குள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் கோவை கலெக்டரிடம் மனு அளித்தனர். இந்நிலையில் இன்று திடீரென டாஸ்மாக் கடை முன்பு சென்ற பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதை அடுத்து அங்கு வந்த ஆலாந்துறை போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனிடையே வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களும் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

    • விவசாய பொருள்களை விற்பனைக்கு எடுத்துச் செல்லவும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் செல்லவும் சிரம படுகின்றனர்.
    • மழைக்காலங்களில் இந்த ஆற்றில் அதிகப்படியான மழைநீர் செல்வதால் ஓடை வழியாக யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்டது கம்மம்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சியில் கம்மம்பட்டி காட்டுவளவு விநாயகபுரம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமம் தருமபுரி-கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் இருப்ப வர்கள் தொப்பையாறு ஆற்றை கடந்து தான் தருமபுரி-சேலம் மாவட்டத்திற்கு விவசாய பொருள்களை விற்பனைக்கு எடுத்துச் செல்லவும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் செல்லவும் சிரம படுகின்றனர்.

    மழைக்காலங்களில் இந்த ஆற்றில் அதிகப்படியான மழைநீர் செல்வதால் ஓடை வழியாக யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    கடந்த காலங்களில் இப்பகுதி பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்களே ஒன்றிணைந்து தொப்பையாற்றின் ஆற்றின் குறுக்கே சிறிய பாலம் மற்றும் மண் சாலை அமைத்துக் கொண்டு பயன்படுத்தி வந்தனர்.

    தற்பொழுது தொப்பூர் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக சுற்றியுள்ள கால்வாய்கள் மற்றும் ஆற்றில் அதிகப்படியான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    அதனால் தொப்பை யாற்றில் இருந்து மேட்டூருக்கு செல்லும் பொடாரியம்மன் ஆற்றில் அதிகமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் அமைத்து கொண்ட மண் சாலை உடைந்து மழை நீர் வெளியேறுகிறது.

    இதனால் பொதுமக்கள் ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்து தர வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ×