என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தண்ணீர் தொட்டியில் பிணமாக கிடந்த 4 மாத குழந்தை- போலீசார் விசாரணை
Byமாலை மலர்11 July 2020 9:07 AM GMT (Updated: 11 July 2020 9:07 AM GMT)
கல்லாவி அருகே தண்ணீர் தொட்டியில் 4 மாத பெண் குழந்தை பிணமாக மிதந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லாவி:
கல்லாவி அருகே தண்ணீர் தொட்டியில் 4 மாத பெண் குழந்தை பிணமாக மிதந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா கல்லாவி அருகே உள்ள அம்மன்கோவில்பதி கிராமத்தை சேர்ந்தவர் வேடியப்பன் (வயது 30). லாரி டிரைவர். இவரது மனைவி ஷோபனா (25). இவர்களுக்கு சுதர்சன் (2) என்ற மகனும், தேவதர்ஷினி என்ற 4 மாத பெண் குழந்தையும் இருந்தனர். நேற்று வேடியப்பன் வெளியே செல்வதாக மனைவியிடம் கூறி சென்றார். ஷோபனா வீட்டில் சமையல் செய்து கொண்டு இருந்தார்.
பின்னர் வேலையை முடித்து விட்டு வந்தபோது குழந்தையை காணவில்லை. இதனால் ஷோபனா குழந்தையை தேடினார். அப்போது வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்த போது குழந்தை தேவதர்ஷினி தண்ணீரில் மூழ்கிய நிலையில் கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஷோபனா மற்றும் அக்கம் பக்கத்தினர் குழந்தையை ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் கல்லாவி போலீசார் ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று வேடியப்பன், ஷோபனா மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினார்கள். 4 மாத பெண் குழந்தை தண்ணீர் தொட்டியில் பிணமாக கிடந்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அம்மன் கோவில்பதி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கல்லாவி அருகே தண்ணீர் தொட்டியில் 4 மாத பெண் குழந்தை பிணமாக மிதந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா கல்லாவி அருகே உள்ள அம்மன்கோவில்பதி கிராமத்தை சேர்ந்தவர் வேடியப்பன் (வயது 30). லாரி டிரைவர். இவரது மனைவி ஷோபனா (25). இவர்களுக்கு சுதர்சன் (2) என்ற மகனும், தேவதர்ஷினி என்ற 4 மாத பெண் குழந்தையும் இருந்தனர். நேற்று வேடியப்பன் வெளியே செல்வதாக மனைவியிடம் கூறி சென்றார். ஷோபனா வீட்டில் சமையல் செய்து கொண்டு இருந்தார்.
பின்னர் வேலையை முடித்து விட்டு வந்தபோது குழந்தையை காணவில்லை. இதனால் ஷோபனா குழந்தையை தேடினார். அப்போது வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்த போது குழந்தை தேவதர்ஷினி தண்ணீரில் மூழ்கிய நிலையில் கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஷோபனா மற்றும் அக்கம் பக்கத்தினர் குழந்தையை ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் கல்லாவி போலீசார் ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று வேடியப்பன், ஷோபனா மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினார்கள். 4 மாத பெண் குழந்தை தண்ணீர் தொட்டியில் பிணமாக கிடந்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அம்மன் கோவில்பதி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X