என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை திருட்டு- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
Byமாலை மலர்10 July 2020 4:01 PM GMT (Updated: 10 July 2020 4:01 PM GMT)
கோட்டக்குப்பம் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகையை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தை அடுத்த கீழ்புத்துப்பட்டு காலனி பகுதியை சேர்ந்தவர் தமிழ் (வயது 52). இவர் புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி எலிசபெத்துக்கு (48) உடல்நிலை சரியில்லாததால் அவரை சிகிச்சைக்காக கடந்த மாதம் 29-ந் தேதியன்று சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார். அங்கு சிகிச்சை முடிந்து மீண்டும் நேற்று முன்தினம் வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதைக்கண்டு திடுக்கிட்ட அவர், வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 6¼ பவுன் நகை திருட்டு போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
வீட்டில் உள்ளவர்கள் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகையை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. திருட்டுப்போன நகையின் மதிப்பு ரூ.1½ லட்சமாகும். இதுகுறித்த புகாரின்பேரில் கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தை அடுத்த கீழ்புத்துப்பட்டு காலனி பகுதியை சேர்ந்தவர் தமிழ் (வயது 52). இவர் புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி எலிசபெத்துக்கு (48) உடல்நிலை சரியில்லாததால் அவரை சிகிச்சைக்காக கடந்த மாதம் 29-ந் தேதியன்று சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார். அங்கு சிகிச்சை முடிந்து மீண்டும் நேற்று முன்தினம் வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதைக்கண்டு திடுக்கிட்ட அவர், வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 6¼ பவுன் நகை திருட்டு போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
வீட்டில் உள்ளவர்கள் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகையை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. திருட்டுப்போன நகையின் மதிப்பு ரூ.1½ லட்சமாகும். இதுகுறித்த புகாரின்பேரில் கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X