என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள்- அதிகாரி தகவல்
Byமாலை மலர்8 July 2020 8:56 AM GMT (Updated: 8 July 2020 8:56 AM GMT)
திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகளுக்கு நெல், நிலக்கடலை, கம்பு, சோளம், ராகி விதைகள் 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படும் என்று வேளாண்மைத்துறை இணை இயக்குனர் தெரிவித்தார்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குனர் ரமணன் கூறியதாவது:-
புதிய மாவட்டத்துக்கு இணை இயக்குனர் அலுவலகம் ஆரம்பிக்கப்பட்ட பிறகு தமிழக அரசு வேளாண்மை அலுவலர்கள், களப் பணியாளர்கள், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், பதிவறை எழுத்தர் எனப் புதிதாக பதவி ஏற்றுக்கொண்டு பணிகள் தொடங்கப்பட்டு அவர்களுக்கு மாவட்டத்தில் எவ்வாறு பணிபுரிய வேண்டும், விவசாயிகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பருவ மழை தொடங்கி உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், மானாவாரி பயிர்கள் நிலக்கடலை, கம்பு, சோளம், ராகி, பருத்தி உள்ளிட்ட பயிர்களை 15 ஆயிரம் ஹெக்டேர் அளவில் விவசாயிகள் பயிரிட உள்ளார்கள். விவசாயிகளுக்கு தேவையான விதை நெல்கள், நிலக்கடலை, துவரை, அவரை, சோளம், கம்பு, பருத்தி ஆகிய விதைகளை வேளாண்மை விரிவாக்க அலுவலகத்தில் 50 சதவீத மானியத்தில் வழங்கி வருகிறோம். விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதைகளை வாங்கி பயன் அடையலாம். விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகளை களப் பணியாளர்கள் நேரடியாகச் சென்று வழங்கி வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஸ்வநாதன், உதவி இயக்குனர் ராகினி ஆகியோர் உடனிருந்தனர்.
திருப்பத்தூர் மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குனர் ரமணன் கூறியதாவது:-
புதிய மாவட்டத்துக்கு இணை இயக்குனர் அலுவலகம் ஆரம்பிக்கப்பட்ட பிறகு தமிழக அரசு வேளாண்மை அலுவலர்கள், களப் பணியாளர்கள், உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், பதிவறை எழுத்தர் எனப் புதிதாக பதவி ஏற்றுக்கொண்டு பணிகள் தொடங்கப்பட்டு அவர்களுக்கு மாவட்டத்தில் எவ்வாறு பணிபுரிய வேண்டும், விவசாயிகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பருவ மழை தொடங்கி உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், மானாவாரி பயிர்கள் நிலக்கடலை, கம்பு, சோளம், ராகி, பருத்தி உள்ளிட்ட பயிர்களை 15 ஆயிரம் ஹெக்டேர் அளவில் விவசாயிகள் பயிரிட உள்ளார்கள். விவசாயிகளுக்கு தேவையான விதை நெல்கள், நிலக்கடலை, துவரை, அவரை, சோளம், கம்பு, பருத்தி ஆகிய விதைகளை வேளாண்மை விரிவாக்க அலுவலகத்தில் 50 சதவீத மானியத்தில் வழங்கி வருகிறோம். விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதைகளை வாங்கி பயன் அடையலாம். விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகளை களப் பணியாளர்கள் நேரடியாகச் சென்று வழங்கி வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஸ்வநாதன், உதவி இயக்குனர் ராகினி ஆகியோர் உடனிருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X