search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை (பழைய படம்)
    X
    கொரோனா பரிசோதனை (பழைய படம்)

    தமிழகத்தில் இன்று 3,616 பேருக்கு கொரோனா: 4,545 பேர் டிஸ்சார்ஜ்- 65 பேர் பலி

    தமிழகத்தில் இன்று 3,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 4,545 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
    தமிழகத்தில் கடந்த மாதத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. இதனால் 50 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 16 நாட்களில் உயர்ந்தது.

    சென்னை உள்பட ஐந்து மாவட்டங்களில் (செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை) முழு பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் சென்னையில் சற்று கொரோனாவின் தாக்கம் குறைய ஆரம்பித்துள்ளது.

    இன்று தமிழகம் முழுவதும் 3,616 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 1,18,594 ஆக உயர்ந்துள்ளது.

    ஆறுதல் அளிக்கும் விதமாக இன்று 4545 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 71,116 பேர் குணமடைந்துள்ளனர்.

    அதேவேளையில் 65 பேர் (20 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள்) உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 1636 ஆக உயர்ந்துள்ளது.

    இன்று 36,938 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், 35,423 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    Next Story
    ×