search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    பல்லடம் அருகே தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை

    பல்லடம் அருகே தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பல்லடம்:

    பல்லடம் மங்கலம் ரோடு காமராஜர் நகரை சேர்ந்தவர் பொன்னுசாமி(வயது 44). டிரைவர். இவருக்கு மேனகா (40) என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர். பொன்னுசாமி மது பழக்கம் உண்டு. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மேனகா தனது கணவரிடம் குடிபழக்கத்தை நிறுத்துமாறு கூறினார்.

    இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மேனகா தனது மகளுடன் அருகில் உள்ள அண்ணன் வீட்டுக்கு சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த பொன்னுசாமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×