என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெவ்வெறு சம்பவங்களில் புதுப்பெண் உள்பட 2 பேர் தற்கொலை
Byமாலை மலர்5 July 2020 9:51 AM GMT (Updated: 5 July 2020 9:51 AM GMT)
வெவ்வெறு சம்பவங்களில் புதுப்பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியகுளம்:
பெரியகுளம், ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்தவர் கவுதம்(வயது 30). இவருக்கும் செம்பட்டியை சேர்ந்த கவுசல்யாவுக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று கவுசல்யா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக பெரியகுளம் ஆர்.டி.ஓ. சினேகா விசாரணை செய்து வருகிறார்.
இதேபோல போடி புதூர் போயன்துறை சாலை பகுதியை சேர்ந்த கருப்பு மகன் பிரபாகரன் (21). இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு பிரபாகரன் வீட்டு தாழ்வாரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போடி நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி போடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரன் ஏன் தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியகுளம், ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்தவர் கவுதம்(வயது 30). இவருக்கும் செம்பட்டியை சேர்ந்த கவுசல்யாவுக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று கவுசல்யா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக பெரியகுளம் ஆர்.டி.ஓ. சினேகா விசாரணை செய்து வருகிறார்.
இதேபோல போடி புதூர் போயன்துறை சாலை பகுதியை சேர்ந்த கருப்பு மகன் பிரபாகரன் (21). இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு பிரபாகரன் வீட்டு தாழ்வாரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போடி நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி போடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரன் ஏன் தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X